அரசுப்பணம் ரூ.4,500 கோடியை அபேஸ் செய்தாரா மலேசிய பிரதமர்? - விசாரணைக் குழு அமைப்பு
கோலாலம்பூர்: அரசு நிதியில் இருந்து சொந்த வங்கிக் கணக்கிற்கு சுமார் 4500 கோடி ரூபாயை மாற்றியதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த பன்முக விசாரணை அமைப்புகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இடம்பெறும் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப் பட உள்ளது.
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் (61). இவர் அரசு நிதியில் இருந்து தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை மாற்றியதாகக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இது ரூ. 4500 கோடி ஆகும்

இது தொடர்பாக பன்முக விசாரணை அமைப்புகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இடம் பெறும் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஊழல் தடுப்பு ஆணையம், மத்திய வங்கி, போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் இடம் பெறுவர்.
இந்தத் தகவலை அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் அப்துல் கலி படாயில் அறிவித்துள்ளார்.
ஆனால் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை பிரதமர் நஜீப் ரசாக் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை பதவியில் இருந்து விரட்டியடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரத்தின் ஒரு அங்கம்தான் இது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கிடையாது'' எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த ஊழல் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என இரண்டு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications