முதிய நோயாளிகளைப் பலாத்காரம் செய்த ஆண் செவிலியருக்கு 9 ஆண்டுகள் சிறைதண்டனை
ஹெல்சின்கி: பின்லாந்து நாட்டில் ஆண் செவிலியர் ஒருவர் முதிய நோயாளிகளை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு 9 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் 74 முதல் 100 வயது வரையிலான முதிய நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது கொடூரனுக்கு நேற்று அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

தென்மேற்கு பின்லாந்தின் பிர்கன்மா பகுதியில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக 27 முதியவர்களை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது நேற்று நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த கொடூரனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மறதி, பேச முடியாமை, வாதம் போன்ற நோய்களால் துன்புறுவதால் தங்களுக்கு நேர்ந்த இந்த கொடூரத்தை அவர்களால் வெளியே கூட சொல்ல முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகின்ற இந்நாளில் நோயாளிகளான அப்பாவி முதியவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications