முதிய நோயாளிகளைப் பலாத்காரம் செய்த ஆண் செவிலியருக்கு 9 ஆண்டுகள் சிறைதண்டனை
ஹெல்சின்கி: பின்லாந்து நாட்டில் ஆண் செவிலியர் ஒருவர் முதிய நோயாளிகளை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு 9 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் 74 முதல் 100 வயது வரையிலான முதிய நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது கொடூரனுக்கு நேற்று அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
தென்மேற்கு பின்லாந்தின் பிர்கன்மா பகுதியில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக 27 முதியவர்களை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது நேற்று நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த கொடூரனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மறதி, பேச முடியாமை, வாதம் போன்ற நோய்களால் துன்புறுவதால் தங்களுக்கு நேர்ந்த இந்த கொடூரத்தை அவர்களால் வெளியே கூட சொல்ல முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகின்ற இந்நாளில் நோயாளிகளான அப்பாவி முதியவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.