மலேசியாவில் ஜும்மா தொழுகை நடத்திய இமாமின் கன்னத்தில் அறைந்த இந்தியர்
கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள தேசிய மசூதியில் ஜும்மா தொழுகை நடந்து கொண்டிருந்தபோது இந்தியர் ஒருவர் இமாமின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஜும்மா தொழுகை நடைபெற்றது. அந்த தொழுகையில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஷபிர் அகமது கான்(31) என்பவரும் கலந்து கொண்டார். இரண்டாவது வரிசையில் இருந்த அவர் திடீர் என்று முதல் வரிசைக்கு வந்து தொழுகை நடத்திக் கொண்டிருந்த இமாம் முகமது ஜுஹைரி பி முகமது யாதீம் அருகே சென்று அவர் பயன்படுத்திய மைக்கை பறிக்கப் பார்த்தார்.

திடீர் என கான் இமாமின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு அவரது இடத்தில் நின்று தொழுகையை நடத்த முயன்றார். இதை பார்த்த பிறர் அதிரிச்சி அடைந்தனர். உடனே மசூதி காவலர்கள் ஓடி வந்து கானை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் கானை கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் மனநம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் தனக்கு தானே பேசிக் கொள்கிறார். விசாரணையில் கான் போலீசாரிடம் கூறுகையில்,
தொழுது கொண்டிருக்கையில் இமாமின் இடத்தில் நீ நின்று தொழுகையை நடத்து என்று ஒரு குரல் கேட்டது. அதனால் தான் இமாமின் இடத்திற்கு சென்றேன் என தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications