யு.எஸ்.: தற்கொலை செய்த நபரின் ஜீப் மோதி சென்னையைச் சேர்ந்த எஞ்சினியர் தம்பதி பலி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கியால் சுட்டபடி ஒருவர் ஓட்டிய ஜீப் மற்றொரு காரில் மோதி விபத்துள்ளானதில் சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் எஞ்சினியர் தம்பதியும், அவர்களைப் பார்க்கச் சென்றிருந்த பெண்ணின் தாயாரும் பரிதாபமாக பலியானார்கள்.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கும், சென்னை மந்தைவெளியை சேர்ந்த சொப்னாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது.
@abc15 pic.twitter.com/jcgA45WSlF
— Ammann Shaun (@AmmannShaun) June 8, 2015 மூர்த்தியும், சொப்னாவும் கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள் என்பதால் இருவரும் திருமணம் முடிந்தவுடன் அமெரிக்கா சென்றனர். அங்கு அரிசோனா மாநிலம், பீனிக்ஸ் சிட்டியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருவரும் பணி செய்து வந்தனர்.
அமெரிக்காவில் உள்ள சொப்னாவை பார்ப்பதற்காக, அவருடைய தாய் புவனேஸ்வரி கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் இருந்து அமெரிக்கா சென்றார்.
கடந்த 7ம் தேதி புவனேஸ்வரி, மகள், மருமகன், ஆகிய 3 பேரும் பீனிக்ஸ் சிட்டியின் பக்கத்து நகரங்களுக்கு தங்களுடைய சொந்த காரில் சுற்றுலா சென்றனர்.
அந்த காரை மூர்த்தி ஓட்டினார். அந்தக் கார் செடோனா என்ற நகருக்கு அருகே சென்று கொண்டு இருந்த போது எதிரே படுவேகமாக வந்த ஜீப் ஒன்று இவர்கள் 3 பேரும் பயணம் செய்த காரின் மீது பலமாக மோதியது. இந்த கொடுமையான விபத்தில் மூர்த்தியும், அவருடைய மாமியார் புவனேஸ்வரியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு வாகனங்களுமே அப்பளம் போல் நொறுங்கிவிட்டன.
இந்த விபத்தில், சொப்னாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவக்குழுவினர், அவரை மீட்டு அரிசோனா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சொப்னா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 3 பேர் வந்த காரின் மீது மோதிய ஜீப்பை ஓட்டி வந்தவர் தன்னைத்தான் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் அவருடைய ஜீப் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவ்விபத்து குறித்து அரிசோனா மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications