பலாத்கார வழக்கில் சிக்கிய மண்டேலா பேரன்- தென் ஆப்ரிக்காவில் பரபரப்பு
ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவின் மா மனிதரான நெல்சன் மண்டேலாவின் பேரன் ஒருவர் பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நிலவி வந்த நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவரும், மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபருமான நெல்சன் மண்டேலாவின் பேரன்களில் ஒருவர் புசோ மண்டேலா.
இவர் கடந்த வாரம், தென் ஆப்பிரிக்க தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள உணவு விடுதி ஒன்றில் 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இதையடுத்து, கடந்த திங்கள் அன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கும் புசோ, வருகிற வெள்ளிக்கிழமை ஜோகன்னஸ்பர்க் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மண்டேலாவின் பேத்திகளில் ஒருவர், இந்த வருடத்தின் தொடக்கத்தில் சாலை விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழக்க காரணமாகி தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.