நெல்சன் மண்டேலாவின் நினைவு தினம்– ஆயிரக்கணக்கானோர் நினைவஞ்சலி
Subscribe to Oneindia Tamil
ஜோகன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் நினைவஞ்சலி செலுத்தினர்.
தென்னாப்பிரிக்கா முன்னள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் நினைவு தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் இருந்து பொது மக்கள் தங்கள் அஞ்சலியைப் பதிவு செய்யும் வகையில் தனித் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டது.

ஜோகன்னஸ்பெர்க் நகரில் நேற்று நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மண்டேலாவின் பேத்தி நிடிலேகா கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். இதில் மண்டேலாவின் பேத்தியும் பங்கேற்றார்.
பின்னர் ஆயிரக்கணக்கானோர் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செய்திகளை பதிவு செய்ய பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட தொலைபேசியில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் அஞ்சலி செய்திகளை பதிவு செய்துவந்தனர்.












Click it and Unblock the Notifications