நெதர்லாந்தில் துப்பாக்கிச் சூடு.. ஏராளமானோர் காயம்.. தீவிரவாதிகளின் கைவரிசையா என விசாரணை
Subscribe to Oneindia Tamil
தி ஹேக்: நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் பயணம் செய்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் பலர் காயமடைந்துள்ளனர்.
நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் வேலைக்கு செல்பவர்கள் டிராம் வண்டியில் இன்று பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது டிராம் வண்டியில் நுழைந்த நபர் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார்.

உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் அருகிலிருந்தவர்களை சுடத் தொடங்கினார். பின்னர் அங்கிருந்து தப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
இது தீவிரவாதிகளின் கைவரிசையா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications