”என் மனக் குழப்பத்தை தீர்த்தது இந்தியக் கோவில்கள்தான்”- மார்க் ஸூகர்பெர்க் உருக்கம்
கலிபோர்னியா: இந்தியக் கோவில்களால்தான் நான் என் மனக்குழப்பத்தில் இருந்து வெளியில் வந்தேன் என்று பிரதமர் மோடியிடம் பேஸ்புக் நிறுவனர் மார்க் தெரிவித்தார்.
கலிபோர்னியாவில் ஃபேஸ்புக் தலைமையகத்தில் நடந்த டவுன்ஹால் நிகழ்ச்சியில் நேற்று பிரதமருடன் உரையாடினார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க்.

அப்போது அவர், ''இந்தியா என் மனதுக்கு நெருக்கமான நாடு. சில வருடங்களுக்கு முன் பேஸ்புக் வருவாய் தொடர்பான பிரச்சனைகளில் நான் ஆழ்ந்திருந்தேன். அப்போது மிகவும் குழப்பமான மனநிலையில் நான் இருந்தேன். அதனால் எனது வழிகாட்டியான ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸிடம் இதுபற்றிப் பேசினேன்.
தனக்கும் இது போன்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டதாகவும், அப்போது இந்தியா சென்று அங்கே இருந்த கோயில்களுக்குச் சென்று வந்ததில் தெளிவு கிடைத்ததாகவும் சொன்னார். அதனால் நானும் ஒரு மாத காலம் இந்தியா சென்று, அங்கிருக்கும் கோயில்களுக்குச் சென்றேன். கோயில்களில் மக்களிடம் இருந்த பிணைப்பு எனக்குப் புரிந்தது. அதுவே என்னை மேலும் வலுப்படுத்தியது'' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications