ஈராக்கில் பயங்கர தீ விபத்து.. 50 பேர் பலி! உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சம்
பாக்தாத்: கிழக்கு ஈராக்கில் உள்ள அல்-குட் நகரில் அமைந்துள்ள ஒரு பெரிய பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்ததாக அரசு செய்தி நிறுவனம் ஐ.என்.ஏ (INA) தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், ஐந்து மாடிக் கட்டிடம் தீயால் முற்றிலும் சூழப்பட்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடிய காட்சிகளும் பதிவாகியுள்ளன. முதற்கட்ட தகவலின்படி, சுமார் 50 பேர் உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை மாகாண ஆளுநர் உறுதி செய்திருப்பதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் விசாரணை
தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால், விசாரணையின் ஆரம்ப முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று மாகாண ஆளுநர் கூறியுள்ளார். வணிக வளாகத்தின் கட்டிட உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications