ஜெர்மன்விங்ஸ் துணை விமானி போன்றே தற்கொலை செய்ய மலேசிய விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய விமானி?
பாரீஸ்: தற்போது மடகாஸ்கர் அருகே கிடைத்துள்ள விமானத்தின் வால் பகுதியை வைத்து பார்க்கையில் மாயமான மலேசிய விமானத்தை அதன் விமானி ஜாஹரி அகமது தற்கொலை செய்ய விபத்துக்குள்ளாக்கியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்றும், அதில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டனர் என்றும் மலேசிய அரசு தெரிவித்தது.
17 மாதங்களாக தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தேடியும் விமானத்தின் பாகம் எதுவும் கிடைக்கவில்லை.

வால் பகுதி
பிரான்ஸின் கட்டுப்பாட்டில் 'இந்தியப் பெருங்கடலில் உள்ள ரீ யூனியன் தீவு' (மொரீஷியஸுக்கு அருகே உள்ளது) தீவில் கடந்த புதன்கிழமை போயிங் 777 ரக விமானத்தின் வால் பகுதி கரை ஒதுங்கியது. தமிழர்கள் கணிசமாக வசிக்கும் தீவான அங்கு கிடைத்துள்ள பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடயைதாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

விமானம்
விமானம் திடீர் என்று அதிவேகத்தில் தரைநோக்கி வந்துள்ளது. அப்போது தான் அந்த வால் பகுதி உடைந்து கடலில் விழுந்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை
குடும்ப பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த விமானி ஜாஹரி அகமது தற்கொலை செய்ய விமானத்தை விபத்துக்குள்ளாக்கியிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் முன்பே தெரிவித்திருந்தனர். தற்போது நடந்துள்ளதை பார்க்கையில் அவர்களின் கணிப்பு சரியாகியுள்ளது என்று தெரிகிறது.

ஜெர்மன் விங்ஸ்
கடந்த மார்ச் மாதம் ஸ்பெயினில் இருந்து ஜெர்மனி சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அதன் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ் வேண்டும் என்றே பிரான்ஸில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளாக்கினார். இதில் லுபிட்ஸ் உள்பட 149 பேர் பலியாகினர்.

அதே முறை
லுபிட்ஸ் விமானத்தின் வேகத்தை திடீர் என்று அதிகரித்து தரை நோக்கி வந்து மலை மீது மோதச் செய்தார். மலேசிய விமானமும் அதே போன்று திடீர் என்று அதிவேகத்தில் தரை நோக்கி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications