ரஷ்யா அதிபர் புதின் விமானத்தை இலக்கு வைத்து தாக்குதல்?
மாஸ்கோ: ரஷ்யா அதிபர் புதின் விமானத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தவறுதலாக மலேசிய பயணிகள் விமானம் சிக்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக உக்ரைன் இருந்தது. 1990களில் சோவியத் ரஷ்யா சிதறுண்ட நிலையில் உக்ரைன் தனிநாடாகியது.
இருப்பினும் உக்ரைனின் பல சுயாட்சி பெற்ற மாகாணங்கள் ரஷ்யாவுடன் மீண்டும் இணைவதையே விரும்பி வருகின்றன. அண்மையில் கிரிமீயா என்ற மாகாணம் ரஷ்யாவுடன் இணைவதாக பிரகடனம் செய்து இணைந்தது.

கிழக்கு உக்ரைன் விவகாரம்
இதேபோல்தான் கிழக்கு உக்ரைனின் சில மாகாணங்களும் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இதற்கு உக்ரைன் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதனால் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைன் அரச படைகளுக்கும் இடையே மோதல்களும் வெடித்து வருகின்றன.

அமெரிக்கா ஆதரவு
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. அத்துடன் உக்ரைன் அரச படைகளுக்கு ஆதரவாக ஆயுதமேந்திய குழுக்களும் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன. இவர்களுக்கு அமெரிக்கா மறைமுக உதவிகள் செய்து வருகிறது. அதே போல உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஆதரவுடன் போராளிகள் உக்ரைனில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலேசிய விமானம் மீது தாக்குதல்
இந்த நிலையில்தான் 295 பயணிகளுடன் கோலாலம்பூர் வந்து கொண்டிருந்த மலேசிய விமானம் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டது. அதில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர்.

புதின் விமானம்
மலேசிய பயணிகள் விமானம் தாக்குதலுக்குள்ளான அதே நேரத்தில்தான் ரஷ்யா அதிபர் புதின் பயணித்த விமானமும் அதே வான்வெளியில் மாஸ்கோ நோக்கி வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துவிட்டு மாஸ்கோவுக்கு கிழக்கு உக்ரைன்வான் வழியாகவே புதின் பயணித்ததாக ரஷ்யா ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

புதினுக்கு இலக்கு?
இதனால் உக்ரைன் அரச படைகள் அல்லது உக்ரைன் ஆதரவு ஆயுதக் குழுவினர், புதினின் விமானத்தை இலக்கு வைப்பதாக நினைத்து மலேசிய விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்றும் ரஷ்யா ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன

தவறுதலாக சிக்கிய மலேசிய விமானம்?
இப்படி புதினின் விமானத்துக்கு இலக்கு வைக்கப்பட்டதில்தான் தவறுதலாக மலேசிய பயணிகள் விமானம் சிக்கியதாகவும் இதனாலேயே உக்ரைன் அரசு, ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களே அதை தாக்கியதாகவும் செய்திகளை பரப்புவதாகவும் கூறப்படுகிறது.

முழு விசாரணைக்கு கோரிக்கை
இருப்பினும் தாக்குதல் நடத்தியது யார்? எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது? யாரை இலக்கு வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது? என்பது பற்றி முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications