"பயமா இருக்கு" ... விமானத்தில் ஏறும் முன் மலேசிய பயணி வெளியிட்ட கடைசி நேர வீடியோ!
பெடலிங் ஜெயா, மலேசியா: உக்ரைன்- ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த மலேசிய பயணி ஒருவர் வெளியிட்டுள்ள கடைசி நேர வீடியோ தற்போது படு வேகமாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதுதான் அந்த விமானம் தொடர்பான கடைசிப் படமாகவும் அமைந்துள்ளது. விமானத்தில் பயணிப்பது குறித்து தனக்கு நடுக்கமாக உள்ளதாக அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.
அவரது பெயர் முகம்மது அலி முகம்மது சலிம். விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த வீடியோவை எடுத்து இன்ஸ்டாகிராம் மூலம் அவர் அப்லோட் செய்துள்ளார்.

ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்
ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானம், ரஷ்ய - உக்ரைன் எல்லையில் உக்ரைன் நாட்டுக்குள் வைத்து ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

295 பேர் பலி
இதில் 280 பயணிகள் 15 விமான ஊழியர்கள் பலியானார்கள். இந்த கொடூர தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை.

கடைசி நேர காட்சிகள்
இந்த நிலையில் அந்த விமானம் தொடர்பான கடைசி நேர வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

14 விநாடி வீடியோ
அந்த வீடியோ 14 விநாடிகளே ஓடுகிறது. இன்ஸ்டாகிராமில் இது அப்லோட் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தங்களது பொருட்களை சீட்டுகளுக்கு மேலே வைத்துக் கொண்டுள்ளது அதில் இடம் பெற்றுள்ளது.

கடவுளே பயமாக இருக்கிறது
அந்த வீடியோவை எடுத்த சலீம், கடவுளே, பயமாக, நடுக்கமாக இருக்கிறது என்று அதில் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் வலம்
தற்போது இந்த வீடியோ யூடியூப், டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் வைரலாக பரவி வருகிறது.

கிளம்பப் போகிறோம்
இந்த வீடியோவில் பைலட்டின் குரலும் கூட பின்னணியில் கேட்கிறது. அதில், அவர், தற்போது நாம் கிளம்பத் தயாராகி விட்டோம். சரக்குகள் ஏற்றப்பட்டு வருகின்றன. அனைவரும் உங்களது செல்போன்களை ஆப் செய்யவும் என்று அந்தக் குரல் கூறும் பின்னணியில் வீடியோ முடிகிறது.

சைக்காலஜி மாணவர்
சலீம், ராட்டர்டாமில் உள்ள எரஸ்மஸ் பல்கலைக்கழகத்தில் சைக்காலஜியில் பிஎச்டி செய்து வந்தார். ஜோஹார் மாகாணத்தின் முவார் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார்.

43 மலேசியர்கள் பலி
இந்த விபத்தில் 15 விமான ஊழியர்கள், 2 குழந்தைகள் உள்பட மொத்தம் 43 மலேசியர்களும் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications