லா ரீயூனியனில் கிடைத்த பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதா?: நம்ப மறுக்கும் உறவினர்கள்

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: லா ரீயூனியன் தீவில் கிடைத்த பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையது என்பதை நம்ப மாட்டோம் என்று பயணிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாகக் கூறி அங்கு விமானத்தை தேடும் பணி ஓாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது.

MH370 families reject Malaysia`s conclusion on plane debris

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரான்சின் கட்டுப்பாட்டில் இந்திய பெருங்கடலில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமானத்தின் வால் பகுதி கிடைத்தது. அந்த பகுதி போயிங் 777 ரக விமானத்தினுடையது என்பது ஆய்வில் தெரிய வந்தது. மாயமான விமானமும் போயிங் 777 ரகம் தான்.

லா ரீயூனியனில் கிடைத்துள்ள பாகம் மாயமான விமானத்தினுடையது தான் என பிரான்ஸை சேர்ந்த ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர் என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கடந்த வாரம் தெரிவித்தார்.

கிடைத்துள்ள பாகம் மாயமான விமானத்தினுடையது என்பதை நம்ப அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மறுக்கிறார்கள். தீவிர ஆய்வு முடிவு வரும் வரை மலேசிய அரசின் அறிவிப்பை ஏற்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+