மாயமான மலேசிய விமானத்தை நிச்சயம் கண்டுபிடிப்போம்: மலேசிய பிரதமர் வாக்குறுதி
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச். 370 நிச்சயம் கண்டுபிடிக்கப்படும் என்று அது மாயமாகி ஓராண்டு நிறைவடைந்த இன்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் ராடாரில் இருந்து மாயமான விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது.
இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் தேடல் பணி மாதக் கணக்கில் நடந்து வருகிறது. ஆனாலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.

ஓராண்டு
மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் விமானம் குறித்து எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

நஜிப் ரசாக்
சர்வதேச நாடுகளுடன் சேரந்து கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து மாயமான மலேசிய விமானத்தை நிச்சயம் கண்டுபிடிப்போம் என மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் இன்று தெரிவித்துள்ளார்.

பொருட்கள்
விமானம் விழுந்த இடத்தில் மிதந்த பல பொருட்கள் எடுக்கப்பட்டது. ஆனால் அவை மீன் பிடிக்கையில் மீனவர்கள் விட்டுச் சென்றது என்று தெரிய வந்தது.

பீப்
விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து வரும் ஒலியை சிறப்பு கருவிகள் இரண்டு மூன்று முறை கண்டறிந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதை வைத்தும் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications