8 மாதங்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மைக்கேல் ஷூமாக்கர்
பெர்ன்: பனிச்சறுக்கு விளையாட்டின்போது தலையில் படுகாயம் அடைந்து கோமாவில் இருந்த முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி பிரான்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து கிரனோபல் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 6 மாதங்களாக கோமாவில் இருந்தார். கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி கோமாவில் இருந்து மீண்ட அவரை சுவிட்சர்லாந்துக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர்.

அவர் சுவிட்சர்லாந்தில் இருக்கும் லூசியான் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லூசியான் மருத்துவமனையில் 3 மாதங்களாக சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பியுள்ளார்.
அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ஆனால் ஷூமாக்கர் தற்போது எப்படி உள்ளார் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆறு மாதங்களாக கோமாவில் இருந்த அவருக்கு சாப்பிட, கை, கால்களை அசைக்க, நடக்க கற்றுக் கொடுக்கவே பல மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் முன்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications