ஆடிப்போன பாகிஸ்தான்.. எதிர்பாராத இடத்தில் திடீரென விழுந்த அடி.. இன்னும் நிறைய அடி விழ போகுதாம்.!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 25 ஆண்டுகளாக இயங்கி வந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் அங்குத் தனது செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் டிஜிட்டல் மயமாக்கலுக்கு மைக்ரோசாப்ட் முக்கியப் பங்கு வகித்த நிலையில், இந்த முடிவு அந்த நாட்டின் ஐடி துறைக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட மைக்ரோசாப்ட் அங்கிருந்து வெளியேறுவது உறுதி என்றே சொல்கிறார்கள். இந்தக் காரணங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான ஒரு சூழலே நிலவி வருகிறது. அங்குப் பொருளாதாரச் சிக்கல் மிக மோசமாக இருக்கிறது. கூடவே அரசியல் குழப்பங்களும் சேர்ந்து கொள்ளவே பாகிஸ்தான் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது.

மைக்ரோசாப்ட்
மேலும், பல முக்கிய நிறுவனங்களால் அங்குத் தொழில் நடத்த முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் முடிவை மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது. பாகிஸ்தானில் பிஸ்னஸ் சூழல் மாறி வருவதாலேயே மைக்ரோசாப்ட் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. 2000ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நுழைந்த மைக்ரோசாப்ட், தனது ஆபீஸ் சாப்ட்வேர் மற்றும் அஸூர் விற்பனையில் கவனம் செலுத்தியது. இருப்பினும், பாகிஸ்தானில் தனியாக எந்தவொரு டீமையும் வைத்திருக்கவில்லை.
இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் உள்ளூரில் ஐந்து ஊழியர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் எனச் சொல்லப்படுகிறது. அதேநேரம் இது பாகிஸ்தானை மட்டும் குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையும் இல்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகெங்கும் 9,000 பேரை வேலையை விட்டு நீக்கியது குறிப்பிடத்தக்கது.
மாஜி நிர்வாகி சொல்வது என்ன
முன்னாள் மைக்ரோசாப்ட் நிர்வாகி ஜவாத் ரெஹ்மான் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் இது தொடர்பாகச் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானில் அனைத்து நிறுவனங்களுமே எதிர்கொள்ளும் சிரமங்களை அவர் விளக்கியுள்ளார். நாட்டின் பொருளாதார ஸ்திரமின்மை, நாணய மதிப்பிழப்பு மற்றும் குறைந்து வரும் வெளிநாட்டு முதலீடு ஆகியவை காரணமாக மைக்ரோசாப்ட் இந்த முடிவை எடுத்திருக்கும் என்கிறார். இப்போது மைக்ரோசாப்ட் தனது பாகிஸ்தான் வாடிக்கையாளர்களுக்குப் பிராந்திய அலுவலகங்கள் மூலம் சேவைகளை வழங்கும். அது பாதிக்கப்படலாம்.
முடிவல்ல தொடக்கம்
மைக்ரோசாப்ட் வெளியேற்றத்துடன் இது நிற்கப் போவதில்லை. பாகிஸ்தானில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளைக் குறைத்துக் கொண்டுள்ளன. எனவே, மைக்ரோசாப்ட் வெளியேறியது வெறும் தொடக்கமாக இருக்கலாம். வரும் காலங்களில் மேலும் பல நிறுவனங்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறலாம் எனச் சொல்லப்படுகிறது.
காரணம் என்ன!
2021 முதல் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 55க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 2022 மற்றும் 2024 வரையிலான காலகட்டத்தில் தொழில்நுட்பத்திற்கான நிதி 88% குறைந்துள்ளது. மோசமான இணைய உள்கட்டமைப்பு, அடிக்கடி ஏற்படும் மின் தடை மற்றும் மோசமான வணிகச் சூழல் போன்ற காரணங்களால் பாகிஸ்தானில் ஐடி துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் நல்ல வேலை தேடி வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்களாம்.
ஐடி ஊழியர்களுக்குப் பாதிப்பு
அதேநேரம் ஐடி நிறுவனங்களைப் பொருத்தவரை மைக்ரோசாப்ட் தயாரிப்புகளை நம்பியிருக்கும் பாகிஸ்தான் பிஸ்னஸ்களுக்கு இதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. ஏனென்றால் பார்டனர்ஷிப் நிறுவனங்கள் மூலம் மைக்ரோசாப்ட் தொடர்ந்து சப்போர்ட்டை தரும். இருப்பினும், மைக்ரோசாப்டின் வெளியேற்றம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குலைப்பதாக இருக்கும்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications