சத்யா நாதெல்லா பேசும்போது.. திடீரென எழுந்த பாலஸ்தீன ஆதரவு கோஷம்! மைக்ரோசாஃப்ட் ஊழியர் டிஸ்மிஸ்
வாஷிங்டன்: காசா போரில் இஸ்ரேலுக்கு தொழில்நுட்பத்தை வழங்கியதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில், நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா பேசும்போது ஊழியர் ஒருவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து அந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
பாலஸ்தீனத்தை விட்டுவிடுங்கள் என்று மைக்ரோசாஃப்ட் ஊழியர் ஜோ லோபஸ், நாதெல்லா பேசும்போது கோஷம் போட்டிருக்கிறார். இதனையடுத்து அவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

வாஷிங்டன் சியாட்டில் பகுதியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சார்பில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் சத்யா உரையாற்ற தொடங்கினார். அப்போது நிறுவனத்தின் ஊழியர்களில் ஒருவரான மென்பொருள் பொறியாளர் ஜோ லோபஸ், ஃப்ரீ பாலஸ்தீன் என்று கோஷமிட்டிருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத சத்யா சில விநாடிகள் ஊழியரை பார்த்தார் பின்னர் தனது உரையை தொடங்கினார். பாதுகாவலர்கள் அந்த ஊழியரை அரங்கத்திலிருந்து வெளியேற்றினர்.
அப்போது, "சத்யா, மைக்ரோசாஃப்ட் பலஸ்தீனர்களை கொலை செய்கிறது என்பதை நீங்கள் காட்ட முடியுமா? இஸ்ரேலின் போர்குற்றங்களை Azure தொழில்நுட்பம் எவ்வாறு ஆதரிக்கிறது என்பதை நீங்கள் காட்ட முடியுமா?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஊழியர் ஜோ லோபஸ் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மட்டுமல்லாது ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளார். அதில், லோபஸின் கேள்வியை பார்த்து மற்ற ஊழியர்கள் அமைதியாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கடுமையான போர் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது அனைவரும் அறிவர். இன்று வரை சுமார் 53,000க்கும் அதிகமான பொதுமக்கள் போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஐநா தலையீடு செய்து கூட போர் நிற்கவில்லை. இந்த போரில் இஸ்ரேல் ராணுவத்திற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சில தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகிறது. இந்த உதவி காசா மக்களை கொல்ல உதவியிருக்கிறது என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் குற்றச்சாட்டு.
பல்வேறு தரப்பினரும் இந்த குற்றச்சாட்டை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மீது வைத்திருக்கின்றனர். ஆனால் எங்கள் தொழில்நுட்பம் எந்த அப்பாவி மக்களையும் கொல்ல உதவவில்லை என்று நிறுவனம் அடித்து கூறுகிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தன்னுடைய அஸூர் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் ராணுவத்திற்கு விற்பனை செய்திருக்கிறது. இது கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை ஆகும். இது மென்பொருள்கள், சேமிப்பு, டேட்டா பகுப்பாய்வு மற்றும் AI சேவைகளை இணையம் மூலம் வழங்குகிறது. காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் பற்றிய தரவுகளை இஸ்ரேல் திரட்டி வைத்திருக்கிறது. இந்த தரவுகளை அஸூர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்து தாக்குதலை நடத்துகிறது என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
-
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications