எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமை! பொறுத்துக்கொள்ள முடியாமல் பேசுகிறார்! தங்கம் தென்னரசு சுடச்சுட பதிலடி!
துபாய்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், திமுக அரசுக்கும் உலகம் முழுவதும் கிடைக்கும் புகழை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள துபாய் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ள நிலையில், அதற்கு துபாயிலிருந்து சில மணி நேரங்களில் சுடச்சுட பதிலடி கொடுத்திருக்கிறார் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
இதன் மூலம் துபாயில் இருந்தாலும் தமிழக நடப்புகளை முதல்வரும், தாமும் உடனுக்குடன் அறிந்து வருவதை அவர் உணர்த்தியுள்ளார்.

தங்கம் தென்னரசு
அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் சென்றிருக்கிறார். இந்நிலையில் துபாயிலிருந்தவாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர். அதில், துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச கண்காட்சிக்கு அது தொடங்கப்பட்ட போது இருந்த வரவேற்பை விட முடிவடையவுள்ள இறுதிவாரமான இந்த வாரத்தில் தான் அதிக வரவேற்பு இருப்பதாகவும் இப்போது தான் உலகம் முழுவதும் இருந்தும் முதலீட்டாளர்கள் அந்தக் கண்காட்சிக்கு வருகை தருவது அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

துபாய் எக்ஸ்போ
இதனால் தான் இந்த தருணத்தில் துபாய் எக்ஸ்போவில் தமிழக அரங்கம் திறக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது தொழில் முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி அவர் வெளிநாடு சென்ற போது எத்தனை கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பிய அவர், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம் மூலம் 6 ஆயிரத்து 100 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் வெளியிட்டார்.

பொறுக்க முடியவில்லை
அதேபோல் விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கை பொறுத்தவரை 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வகையில் வேகமாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள புகழை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

சுடச்சுட பதிலடி
முதலமைச்சர் துபாய் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேட்டியளித்த அடுத்த சில மணி நேரங்களில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துபாயிலிருந்து சுடச்சுட காணொலி மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார். இதன் மூலம் என்னதான் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தாலும் கூட, தமிழக நடப்பு விவரங்களை தொடர்ந்து முதல்வரும், தாமும் கண்காணித்து வருவதை அந்த வீடியோ பதிவு மூலம் உணர்த்தியிருக்கிறார்.
-
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications