கடலில் மிதந்த 4 ஆரஞ்சு கலர் பொருட்கள் விமான பாகங்கள் இல்லை: மீன்பிடி சாதனங்கள்
பெர்த்: மலேசிய விமானத்தை தேடுகையில் தெற்கு இந்திய பெருங்கடலில் மிதந்த பொருட்கள் மீன்பிடி சாதனங்கள் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 8ம் தேதி மாயமான விமானம் என்ன ஆனது என்று தெரியாமல் இரண்டு வாரங்கள் ஓடின. அதையடுத்து விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் விமானம் கடலில் விழுந்து மூழ்கியதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

வானிலை
மலேசிய விமானத்தை தேடும் பணியில் நேற்று 10 விமானங்கள் மற்றும் 10 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் மோசமான வானிலை காரணமாக தேடல் பணி நேற்று துவங்கிய வேகத்தில் நிறுத்தப்பட்டது.

ஆரஞ்சு பொருட்கள்
இந்திய பெருங்கடலில் நேற்று முன்தினம் ஆரஞ்சு நிறத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4 பொருட்கள் விமானத்தின் பாகங்கள் இல்லை என்றும், அவை மீன்பிடி சாதனங்கள் என்றும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

பொருட்கள்
இந்திய பெருங்கடல் பகுதியில் பொருட்கள் மதிந்ததை பல்வேறு நாட்டு செயற்கைக்கோள்கள் படம் பிடித்து அனுப்பி வைத்தன. இந்நிலையில் கடலில் இருந்து எடுக்கப்பட்ட சில பொருட்களை சோதனை செய்ததில் அவற்றுக்கும் விமானத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரிய வந்தது.

மலேசிய பிரதமர்
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகருக்கு வரும் 3ம் தேதி சென்று விமான தேடலை நேரில் பார்வையிட திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications