ஜீன்ஸ் போட்டுக்கிட்டு ஏன் இங்கே வந்தே? புர்கா எங்கே?.. இளம்பெண்ணை அடித்து உதைத்த நபர்.. பரபரப்பு
புர்கா அணியாத பெண்ணை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்
கவுகாத்தி: பர்தா அணியாமல் ஜீன்ஸ் போட்டு கொண்டு, செல்போன் கடைக்கு வந்துவிட்டதால், அந்த கடைக்காரர் அவரை கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கவுகாத்தியில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் பிஸ்வநாத் சைராலி என்ற ஊர் உள்ளது... இந்த ஊரில் நூருல் அமீன் என்பவர் ஒரு செல்போன் கடை வைத்துள்ளார்..
அதாவது செல்போன் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்துள்ளார்.. இந்த கடைக்கு ஒரு பெண், செல்போன் ஹியர்போன் வாங்க வந்துள்ளார்.. அவர் ஒரு இஸ்லாமிய பெண்.. பர்தா அணியாமல் ஜீன்ஸ் அணிந்து வந்ததாக தெரிகிறது.

ஹியர்போன்
இதை பார்த்ததும் நூருல் அமீன் டென்ஷன் ஆகிவிட்டார். அந்த பெண்ணை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டி உள்ளார்.. அத்துடன், அவருடன் அங்கிருந்த 2 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி, கடைக்கு வெளியே தள்ளிவிட்டுள்ளனர்.. இதனால் நிலைகுலைந்து போன அந்த பெண், கடையில் நடந்த சம்பவம் குறித்து தன்னுடைய அப்பாவிடம் சொல்லி உள்ளார்... இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது அப்பாவும், கடைக்கு வந்து நியாயம் கேட்டுள்ளார். ஆனால், கடை ஓனரும், மற்றவர்களும் சேர்ந்து, அவரையும் தாக்கி உள்ளனர்.

தகராறு
இதுகுறித்து பெண்ணின் அப்பா சொல்லும்போது, "என்னுடைய மகள் ஜீன்ஸ் போட்டிருந்தார் என்பதற்காகவே, அவர் கேட்ட ஹியர்போனை தர மறுத்திருக்கிறார்கள்.. தரக்குறைவாக பேசி இருக்கிறார்கள்.. கண்மூடித்தனமாக தாக்கியும் இருக்கிறார்கள்.. அஸ்ஸாமில் தலிபான் முறையை கொண்டு வர பார்க்கிறார்கள்.. பெண்கள் பர்தா அணிய வேண்டும், முகத்தை காட்டக் கூடாது என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.

அஸ்ஸாம்
நாங்க இதே அஸ்ஸாமில்தான் பிறந்து வளர்ந்தோம்... அஸ்ஸாம் கலாச்சாரத்தைத்தான் பின்பற்றி வருகிறோம். என் மகள் பிசிஏ படிக்கிறாள்.. அரசு பள்ளியில் தான் படித்தார்.. அஸ்ஸாமி கலாச்சாரம்தான் என் மகளுக்கு தெரியும்... ஆனால் இங்கு தலிபான் முறையை பின்பற்றி பெண்களை ஒடுக்க பார்க்கின்றனர்" என்றார் கொந்தளிப்புடன்.

ஜீன்ஸ்
பாதிக்கப்பட்ட பெண் சொல்லும்போது, "நான் அந்த கடைக்கு போயிருந்தேன். கடை ஓனர் நூருல் அமீன் வயதானவர்.. அவர் வீடும், கடையும் ஒன்றாக இருக்கிறது.. என்னை பார்த்ததும் ஏன் ஜீன்ஸ் போட்டிருக்கே? ஜீன்ஸ் அணிந்து கொண்டு இங்கெல்லாம் வரக்கூடாது என்று சொன்னார்.. "நீ என் வீட்டுக்கு ஜீன்ஸ் அணிந்து வந்தால், என் மருமகளும் கெட்டு போய்விடுவார்.. அவர் எப்பவுமே புர்காதான் அணிவார்" என்று சொல்லி என்னை திட்டினார்" என்றார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும், அவரின் தந்தையும் போலீசில் புகார் தெரிவிக்கவே நூருல் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications