மோடியும், இம்ரான் கானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்… மலாலா கோரிக்கை
மோடியும், இம்ரான் கானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்... மலாலா கோரிக்கை
லண்டன்: புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்துமாறு நோபல் பரிசு பெற்ற மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கைகுலுக்கி பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே, இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தணியும் என்றும் வீரமங்கை மலாலா கூறியுள்ளார்.
எல்லைகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி இருநாடுகளும் பதற்றத்தைத் தணிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முடிப்பது கடினம்
போரைத் தொடங்குவது எளிது அதனை முடிப்பது கடினம் எனக் கூறியுள்ள மலாலா, இன்னொரு யுத்தம் தேவையில்லை என்றும் போரால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
|
ட்விட்டரில் கேள்வி
ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மலாலாவுக்கு, புல்வாமா தீவிரவாத தாக்குதலின் போது ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என பலர் கேள்வி எழுப்பினர். அதே நேரம், பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதல்களை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தால் அவர்கள் இந்தியாவிடம் வாலாட்டுவதை நிறுத்த மாட்டார்கள் என்றும் உரிய பதிலடி கொடுத்தால் மட்டுமே பின்வாங்குவார்கள் என்றும் பலர் ட்விட்டரில் மலாலாவுக்கு பதிலளித்துள்ளனர்.

ஆதரவு குரல்
மலாலாவின் சமாதான கருத்துக்கு பாகிஸ்தானிலிருந்தும் ஆதரவு குரல் எழுந்துள்ளது. முன்னதாக கருத்து தெரிவித்த இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார வளர்ச்சியை இருநாடுகளும் கருத்தில் கொண்டு போரை விரும்பாமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தலீபான் தீவிரவாதிகள்
பெண் கல்வியை வலியுறுத்தி பேசிய பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா கடந்த 2012-ஆம் ஆண்டு அந்நாட்டு தலீபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். பின்னர், இங்கிலாந்தில் சிகிச்சை பெற்ற அவர் உடல்நலம் தேறி அங்கேயே கல்வியை தொடர்ந்து வருகிறார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications