மோடியும், இம்ரான் கானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்… மலாலா கோரிக்கை
மோடியும், இம்ரான் கானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்... மலாலா கோரிக்கை
லண்டன்: புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்துமாறு நோபல் பரிசு பெற்ற மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கைகுலுக்கி பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே, இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தணியும் என்றும் வீரமங்கை மலாலா கூறியுள்ளார்.
எல்லைகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி இருநாடுகளும் பதற்றத்தைத் தணிக்க முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முடிப்பது கடினம்
போரைத் தொடங்குவது எளிது அதனை முடிப்பது கடினம் எனக் கூறியுள்ள மலாலா, இன்னொரு யுத்தம் தேவையில்லை என்றும் போரால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
|
ட்விட்டரில் கேள்வி
ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மலாலாவுக்கு, புல்வாமா தீவிரவாத தாக்குதலின் போது ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என பலர் கேள்வி எழுப்பினர். அதே நேரம், பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதல்களை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தால் அவர்கள் இந்தியாவிடம் வாலாட்டுவதை நிறுத்த மாட்டார்கள் என்றும் உரிய பதிலடி கொடுத்தால் மட்டுமே பின்வாங்குவார்கள் என்றும் பலர் ட்விட்டரில் மலாலாவுக்கு பதிலளித்துள்ளனர்.

ஆதரவு குரல்
மலாலாவின் சமாதான கருத்துக்கு பாகிஸ்தானிலிருந்தும் ஆதரவு குரல் எழுந்துள்ளது. முன்னதாக கருத்து தெரிவித்த இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார வளர்ச்சியை இருநாடுகளும் கருத்தில் கொண்டு போரை விரும்பாமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தலீபான் தீவிரவாதிகள்
பெண் கல்வியை வலியுறுத்தி பேசிய பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா கடந்த 2012-ஆம் ஆண்டு அந்நாட்டு தலீபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். பின்னர், இங்கிலாந்தில் சிகிச்சை பெற்ற அவர் உடல்நலம் தேறி அங்கேயே கல்வியை தொடர்ந்து வருகிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications