மார்ஸ் முதல் தீவிரவாதத்தை எதிர்ப்பது வரை கூட்டாக செயல்பட மோடி, ஒபாமா முடிவு
வாஷிங்டன்: செவ்வாய்கிரக ஆய்வு மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவது ஆகியவற்றில் இந்தியா, அமெரிக்கா கூட்டாக செயல்படும் என்று பிரதமர் மோடி, அதிபர் ஒபாமா சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா கடந்த திங்கட்கிழமை இரவு வெள்ளை மாளிகையில் விருந்து அளித்தார். இதையடுத்து செவ்வாய்க்கிழமை அன்று மோடியும், ஒபாமாவும் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் விவரம் வருமாறு,

2 மணிநேரம்
வெள்ளை மாளிகையில் ஒபாமாவும், மோடியும் சந்தித்து 2 மணிநேரமாக பேசினார்கள்.

தீவிரவாதம்
தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உள்ளிட்ட உதவிகள் கிடைப்பதை தடுக்க இருநாடுகளும் சேர்ந்து செயல்படும் என்று அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அல் கொய்தா
அல் கொய்தா, லஷ்கர் இ தொய்பா, ஹக்கானி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை எதிர்த்து இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக போராட உள்ளது.

பாதுகாப்பு
பாதுகாப்பு, பொருளாதாரம், விண்வெளி, அணு ஆயுத ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மோடியும், ஒபாமாவும் பேசியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த மாற்றத்திற்கு இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து ஆதரவாக இருக்கும்.

அமெரிக்க நிறுவனங்கள்
பாதுகாப்பு துறையில் வந்து முதலீடு செய்யுமாறு மோடி அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டிகள்
இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்கள், அலகாபாத், அஜ்மீர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக்க அமெரிக்கா உதவி செய்ய உள்ளது.

செவ்வாய் கிரகம்
செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்துள்ளன.

அடுத்த கட்டம்
இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை புதிய கட்டங்களுக்கு கொண்டு செல்ல மோடியும், ஒபாமாவும் உறுதி எடுத்துள்ளனர்.

இம்பிரஸ்ட்
எங்கள் சந்திப்பின்போது பிரதமர் இந்தியாவில் உள்ள ஏழைகள், பொருளாதாரம், நாட்டை முன்னேற்றுவது பற்றி பேசியதை பார்த்து வியந்தேன். திங்கட்கிழமை இரவு மோடி பெரும்பாலும் பொருளாதாரம் பற்றியே பேசினார் என்றார் ஒபாமா.

கிளம்பினார்
5 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி இந்தியாவுக்கு கிளம்பினார்.

கெர்ரி
நாங்கள் மோடிக்கு அளித்த வரவேற்பை மேடிசன் ஸ்கொயர் கார்டனில் அவருக்கு கிடைத்த ராக்ஸ்டார் வரவேற்புடன் ஒப்பிட முடியாது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications