வேலை பர்ஸ்ட், குழந்தை நெக்ஸ்டாம்....கருமுட்டை சேமிப்பில் ஜப்பான் பெண்கள்!
டோக்கியோ: ஜப்பான் இளம்பெண்கள் தற்போது தங்களுடைய கருமுட்டைகளை சேகரித்து வைக்கத் தொடங்கிவிட்டனர்.
ஜப்பான் நாட்டில் பெண்கள் தங்களுடைய கரு முட்டைகளை சேமித்து வைப்பதற்கு கடந்த ஆண்டு மே மாதம் சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டது.
அதைத்தொடந்து ஏராளமான பெண்கள் கரு முட்டைகளை அதற்கான மையங்களில் சேமித்து வைக்கிறார்கள்.
கன்னிப்பெண்களும் அடக்கம்:
இதில் விசேஷம் என்னவென்றால் திருமணமாகாத கன்னிப்பெண்கள் ஏராளமானோர் கரு முட்டைகளை சேமிக்கின்றனர். ஜப்பானில் பெண்கள் கருத்தரிப்பது மிகவும் கடினமாக விஷயமாக உள்ளது.
தாமதமான திருமணம்:
ஜப்பான் பெண்கள் பெரும்பாலானோர் அதிக வயதான பிறகே திருமணம் செய்து கொள்கிறார்கள். வேலைதான் மிக முக்கியம் என்ற நினைப்பால் திருமணம் பற்றி நினைப்பதே இல்லை.
போட்டி போட்டு சேகரிப்பு:
இதனாலும் அவர்களுக்கு குழந்தை இல்லாமல் போகிறது. எனவே இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க கன்னிப்பெண்களும் போட்டி போட்டு கரு முட்டைகளை சேமிக்கிறார்கள்.
வருடத்திற்கு 4 லட்ச ரூபாய்:
சேமிப்பு மையங்களில் 10 கரு முட்டைகளை சேமித்து வைக்க ஜப்பான் பணத்தில் ஒரு வருடத்திற்கு 7 லட்சம் யென் கட்டணமாக வசூலிக்கிறார்கள். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4 லட்ச ரூபாய் ஆகும்.
கருமுட்டை சேகரிப்பு:
ஆனாலும் பணம் செலவானாலும் பரவாயில்லை என பல பெண்களும் கரு முட்டைகளை சேமிக்கிறார்கள்.
வாரிசும் வேணும்:
வேலை, வேலை என்று வாரிசை இழந்துவிடக்கூடாது என்பதற்குதான் இந்த ஏற்பாடு என்கின்றனர் ஜப்பான் பெண்கள்.