கிழக்கு உக்ரைனில் ராணுவம் தாக்குதல்- 50க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் பலி!
டோனட்ஸ்க்: உக்ரைன் அதிபராக பெட்ரோ போரோஷென்கோ பொறுப்பேற்றதும் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். உக்ரைன் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் டோனட்ஸ்க் நகரில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த விமான நிலையத்தைக் கைப்பற்றும் பணியில் ராணுவத்தினர் இறங்கினர். இரு தரப்பிற்கும் இடையே பல மணி நேரம் நீடித்த சண்டையில் 50க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், விமான நிலையம் ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் வந்திருப்பதாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டோனட்ஸ்க்கில் பொதுவாக்கெடுப்பு நடத்தி சுதந்திரத்தை அறிவித்த ரஷ்யாஆதரவாளர்கள், தங்களுக்கு உதவுமாறு ரஷ்யா அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் தங்களை பாதுகாக்க ரஷ்யா அதிபர் புதின் மற்றும் ரஷ்ய மக்கள் உதவிட வேண்டும் என கிளர்ச்சியாளர்களின் தலைவர் டெனிஸ் கோரிக்கை விடுள்ளார்.












Click it and Unblock the Notifications