10 லட்சத்திற்கும் அதிகமானோரை தாக்கிய 'எபோலா' வைரஸ்

Subscribe to Oneindia Tamil

ஜெனிவா: இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் எபோலா வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உயிர் கொல்லியான எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் உலக சுதாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் மார்கரெட் சான் கூறுகையில்,

More than one million people affected by Ebola outbreak: WHO

இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகாமானோரை எபோலா வைரஸ் தாக்கியுள்ளது. அவர்களுக்கு தினசரி தேவையான உணவு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும். இம்முறை எபோலா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த அதிக முயற்சி தேவை. வைரஸ் பரவுவதை தடுக்காவிட்டால் இது மிகப் பெரிய பிரச்சனை ஆகிவிடும்.

கிராமப்புறங்களில் மட்டும் அல்லாமல் நகர்ப்புறங்களிலும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சுகாதாரத் துறையினர் அதிக அளவில் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 170 சுகாதாரத் துறையினர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 80க்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்கி பலியாகியுள்ளனர். வைரஸ் பரவத் துவங்கிய 6 மாதங்களில் அது குறித்த பயத்தில் இருந்து வெளிவருவது தான் மிகவும் கடினமாக உள்ளது என்றார்.

வைரஸ் பரவுவதை தடுக்க உலக சுகாதார அமைப்பு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு ஐ.நா. அதிகாரிகளுக்கு ஐ.நா. தலைவர் பான் கீ மூன் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+