தீ விபத்து: 4வது மாடியில் இருந்து 3 குழந்தைகளை கீழே வீசிய தாய்- வீடியோ இதோ
சியோல்: தென் கொரியாவில் உள்ள 4 அடுக்குமாடி குடுயிருப்பில் தீப்பிடித்தவுடன் தாய் ஒருவர் தனது 3 குழந்தைகளை மாடியில் இருந்து கீழே வீசிவிட்டு தானும் குதித்துள்ளார்.
தென் கொரியாவில் உள்ள பியோங்டேக் நகரில் இருக்கும் 4 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் 4வது மாடியில் 30 வயது பெண் மற்றும் அவரது 3 குழந்தைகள் சிக்கிக் கொண்டனர்.
உள்ளூர் மக்கள் சேர்ந்து போர்வையை பிடித்துக் கொண்டு குழந்தைகளை ஒவ்வொன்றாக கீழே வீசுமாறு கூறினர். முதலில் பயந்த அந்த தாய் வேறு வழியில்லாமல் தனது குழந்தைகளை மாடியில் இருந்து கீழே வீசினார்.
மக்கள் குழந்தைகளை பத்திரமாக பிடித்துவிட்டனர். அதன் பிறகு அந்த பெண்ணும் மாடியில் இருந்து குதித்தார். அவரை மக்கள் போர்வையில் பிடித்து காப்பாற்றினர். இதனால் அந்த பெண்ணும், குழந்தைகளும் காயம் இன்றி தப்பித்தனர்.
இந்த சம்பவத்தை பில் பிராஸ்ட் என்னும் என்ஜினியர் வீடியோ எடுத்து அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications