ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் முதலீடு செய்ய நுழைவு வாயிலாக திகழும் மொசாம்பிக்... : மோடி புகழாரம்
மபுடோ: ஆப்பிரிக்கா கண்டத்தில் இந்தியர்கள் முதலீடு செய்ய நுழைவு வாயிலாக மொசாம்பிக் நாடு திகழ்கிறது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மொசாம்பிக் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் யூசியுடன் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது இருதரப்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
இந்தியாவும் மொசாம்பிக்கும் காலனி ஆதிக்க நாடாக இருந்த காலகட்டங்களில் சந்தித்த துயரங்களே இரு நாடுகளையும் கை கோர்க்க வைத்தது.
காலனி ஆதிக்கத்தில் இருந்த மொசாம்பிக்கின் விடுதலைக்கு இந்தியா பெரும் ஆதரவை அளித்தது. தற்போது ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் முதலீடு செய்ய மொசாம்பிக் நுழைவு வாயிலாக திகழ்கிறது.
இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.
Mozambique has already been one of the gateways for Indian investments into Africa: PM @narendramodi at the joint press meet
— PMO India (@PMOIndia) July 7, 2016
பயங்கரவாதம் உலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்பதை இருவரும் ஒப்புக்கொண்டோம். ஆகையால் இருநாடுகளிடையே ராணுவம் மற்றும் பாதுகாப்பு உறவில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பருப்பு தேவையை மொசாம்பிக் நிவர்த்தி செய்யும் என நம்பிக்கை உள்ளது. மொசாம்பிக்கும் பொருளாதார வளர்ச்சியடைய இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications