துபாய் முத்தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற எம்.பி. ஜின்னா

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் முத்தமிழ்ச் சங்க விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் திரு. ஜின்னா அவர்கள் கலந்து கொண்டார்.

துபாய் முத்தமிழ்ச் சங்க விழா கடந்த 9ம் தேதி மாலை 6 மணிக்கு அல்காஃபி அரங்கில் நடைபெற்றது. செல்வி ஷப்னம் இறைவணக்கப் பாடலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து முத்தமிழ்ச் சங்க தலைவர் திரு. மோகன் தலைமை தாங்க, செயலாளர் திரு. ஷா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, தொழில் அதிபர் திரு வரதராஜ் திரு.ஜின்னா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார். அதை தொடர்ந்து சட்டக்கதிர் ஆசிரியர் திரு. வி.ஆர். எஸ். சம்பத் அவர்களுக்கு டாக்டர். ராஜன் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு. புருஷோத்தமன் அவர்களுக்கு திரு.சிகாமணி பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்.

திரு.ஜின்னா அவர்கள் பேசுகையில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகவும் கௌரவமாக கருதுவதாக மிக்க மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மற்றும் இவ்விழாவில் திரு.கணேஷ், திரு ஷமீம், திரு ஷாபி, திரு அஜய், திரு ஷாபிக், திருமதி.பாரதி, திருமதி.ஷா, திருமதி. நூர்ஜஹான், திருமதி, ஷர்மிளா, திருமதி. ரூபி, திருமதி. ஷல்மா மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இறுதியாக சங்க பொருளாளர் திரு. அனிஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு விழா இனிதே நிறைவு பெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+