தாய்லாந்து ரிசார்ட்டில் நிர்வாணமாக கிடந்த இங்கிலாந்து இளம் ஜோடியின் உடல்கள்
பாங்காக்: தாய்லாந்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் ஜோடியின் உடல்கள் நிர்வாண கோலத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த 24 வயதுள்ள ஆணும், பெண்ணும் கடந்த மாதம் 25ம் தேதி ஜோடியாக தாய்லாந்துக்கு வந்துள்ளனர். அவர்கள் தாய்லாந்தில் உள்ள கோ தாவ் என்ற தீவில் உள்ள ரிசார்ட்டில் பங்களா எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் திங்கட்கிழமை அவர்களின் உடல்கள் நிர்வாண நிலையில் கடலுக்கு அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பெண்ணின் முகத்தில் 3 இடங்களிலும், ஆணின் பின்புறத்தில் 4 இடங்களிலும் காயம் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து ரிசார்ட் ஊழியர் ஒருவர் கூறுகையில்,
அந்த ஜோடியின் உடல்கள் பாறைகளுக்கு பின்னால் கிடந்தன. இந்த தீவில் இப்படி நடந்துள்ளது இதுவே முதல் முறை ஆகும். நான் இது போன்று இதுவரை பார்த்தது இல்லை என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாய்லாந்தின் கிராபி பகுதியில் 51 வயது அமெரிக்கர் ஒருவர் பாரில் ஏற்பட்ட தகராறில் குத்திக் கொலை செய்யப்பட்டார். கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 59 வயது ஆஸ்திரேலிய பெண் புகெட்டில் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications