மியான்மர் ராணுவ ஆட்சி பேயாட்டம்- பொதுமக்கள் மீது கொத்து கொத்தாக குண்டு வீச்சு-100 பேர் பலி; ஐநா ஷாக்
நைபியிடவ்: மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியை எதிர்த்ததாக சொந்த நாட்டு பொதுமக்கள் மீது கொத்து கொத்தாக குண்டுகளை வான்வழியே வீசி கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இச்சம்பவத்துக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான மியான்மர் நாட்டில் ராணுவ கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பொதுமக்களது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. இந்த அடக்குமுறைக்கு எதிராக மியான்மரின் பல பகுதிகளில் பல்வேறு ஆயுதம் தாங்கிய குழுக்கள், ராணுவத்துடன் யுத்தம் நடத்தி வருகின்றன.

மியான்மரின் வடமேற்கு சாகெய்ங் பிராந்தியத்தில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஆயுத குழுக்கள் உக்கிர யுத்தம் நடத்தி வருகின்றன. இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை மியான்மர் ராணுவம் நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இடைவிடாத தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறது இந்த பிராந்தியம்.

இதன் உச்சமாக சாகெய்ங் பகுதியில் சில கிராமங்களை மட்டும் இலக்கு வைத்து விமான மூலம் சரமாரியாக, கொத்து குண்டுகளை வீசியது. இந்த கொத்து குண்டுகளுக்கு இரையான பொதுமக்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.
மியான்மர் ராணுவத்தின் இக்கொடூர தாக்குதலில் சுமார் 100-க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். கிராமங்களில் தெருவெங்கும் பொதுமக்களின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. பா ஸி கிய் என்ற ஒரே ஒரு கிராமத்தில் மட்டும் 60 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மியான்மர் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications