புதிய அமைச்சரவையை அறிவித்த நேபாள பிரதமர்! ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளருக்கு சட்டத்துறை அமைச்சர் பதவி
காத்மாண்டு: நேபாளத்தில் வெடித்த போராட்டங்கள் காரணமாக பழைய ஆட்சி அகற்றப்பட்டுள்ளது. தற்போது இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுஷிலா கார்கி பொறுப்பேற்றிருக்கிறார். இந்நிலையில் அவர் புதிய அமைச்சரவையை அறிவித்திருக்கிறார். குறிப்பாக ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளராக அறியப்பட்ட ஓம் பிரகாஷ் ஆர்யாலுக்கு சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மொத்தம் மூன்று அமைச்சர்கள் புதியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஓம் பிரகாஷ் ஆர்யால், உள்துறை, சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஓம் பிரகாஷ் ஆர்யால் நேபாள நாட்டின் மிகவும் பிரபலமான வழக்கறிஞர். நேபாள நாட்டின் சட்ட அமைப்புகள், மனித உரிமைகள், மற்றும் ஊழல் ஒழிப்புக்கான செயற்பாட்டாளராக இவர் அறியப்படுகிறார். நேபாள அரசியலில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதில் இவர் உறுதியாக இருக்கிறார்.
அதேபோல நேபாளத்தை மின்வெட்டிலிருந்து காப்பாற்றிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் குல்மான் கிசிங், எரிசக்தி, உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரை தொடர்ந்து, புகழ் பெற்ற பொருளாதார நிபுணரான ராமேஸ்வர் கானல், நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் முன்னாள் நிதி செயலாளராக பதவி வகித்திருக்கிறார். நேபாளத்தில் 5 இளைஞர்களில் ஒருவருக்கு வேலையில்லா பிரச்சனை இருக்கிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதே ராமேஸ்வர் கானலின் பிரதான பணியாக உள்ளது.
உலக வங்கி தரவுகளின்படி, நேபாளத்தில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹1,27,597.66 ஆகும். இந்தியாவில் இது ₹2,37,860.46 ஆக இருக்கிறது. எனவே நேபாளத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொறுப்பு இடைக்கால பிரதமருமான சுஷிலா கார்கி தலையில் விழுந்திருக்கிறது. வரும் மார்ச் மாதம் வரை இவர் பிரதமராக தொடர்வார். மார்ச்சில் நடக்கும் தேர்தலையும் இவர் வழிநடத்துவார். அதன் பின்னர் மக்களின் ஆதரவு பெற்ற புதிய பிரதமர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நேபாளத்தை வழிநடத்துவார்.
இதற்கிடையில், இடைக்கால அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் ஓம் பிரகாஷ் ஆர்யால், குல்மான் கிசிங் மற்றும் ராமேஸ்வர் கானல் ஆகியோர் நாட்டை திறம்பட வழிநடத்துவார் என்று அந்நாட்டு மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications