புதிய அமைச்சரவையை அறிவித்த நேபாள பிரதமர்! ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளருக்கு சட்டத்துறை அமைச்சர் பதவி
காத்மாண்டு: நேபாளத்தில் வெடித்த போராட்டங்கள் காரணமாக பழைய ஆட்சி அகற்றப்பட்டுள்ளது. தற்போது இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுஷிலா கார்கி பொறுப்பேற்றிருக்கிறார். இந்நிலையில் அவர் புதிய அமைச்சரவையை அறிவித்திருக்கிறார். குறிப்பாக ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளராக அறியப்பட்ட ஓம் பிரகாஷ் ஆர்யாலுக்கு சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மொத்தம் மூன்று அமைச்சர்கள் புதியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஓம் பிரகாஷ் ஆர்யால், உள்துறை, சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஓம் பிரகாஷ் ஆர்யால் நேபாள நாட்டின் மிகவும் பிரபலமான வழக்கறிஞர். நேபாள நாட்டின் சட்ட அமைப்புகள், மனித உரிமைகள், மற்றும் ஊழல் ஒழிப்புக்கான செயற்பாட்டாளராக இவர் அறியப்படுகிறார். நேபாள அரசியலில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதில் இவர் உறுதியாக இருக்கிறார்.
அதேபோல நேபாளத்தை மின்வெட்டிலிருந்து காப்பாற்றிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் குல்மான் கிசிங், எரிசக்தி, உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரை தொடர்ந்து, புகழ் பெற்ற பொருளாதார நிபுணரான ராமேஸ்வர் கானல், நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் முன்னாள் நிதி செயலாளராக பதவி வகித்திருக்கிறார். நேபாளத்தில் 5 இளைஞர்களில் ஒருவருக்கு வேலையில்லா பிரச்சனை இருக்கிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதே ராமேஸ்வர் கானலின் பிரதான பணியாக உள்ளது.
உலக வங்கி தரவுகளின்படி, நேபாளத்தில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹1,27,597.66 ஆகும். இந்தியாவில் இது ₹2,37,860.46 ஆக இருக்கிறது. எனவே நேபாளத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொறுப்பு இடைக்கால பிரதமருமான சுஷிலா கார்கி தலையில் விழுந்திருக்கிறது. வரும் மார்ச் மாதம் வரை இவர் பிரதமராக தொடர்வார். மார்ச்சில் நடக்கும் தேர்தலையும் இவர் வழிநடத்துவார். அதன் பின்னர் மக்களின் ஆதரவு பெற்ற புதிய பிரதமர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நேபாளத்தை வழிநடத்துவார்.
இதற்கிடையில், இடைக்கால அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் ஓம் பிரகாஷ் ஆர்யால், குல்மான் கிசிங் மற்றும் ராமேஸ்வர் கானல் ஆகியோர் நாட்டை திறம்பட வழிநடத்துவார் என்று அந்நாட்டு மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications