எவ்வளவு திமிர்.. மீண்டும் சீண்டும் நேபாளம்.. புதிய மேப்பை இந்தியாவிற்கு அனுப்ப பிளான்.. பின்னணி!
காத்மண்டு: நேபாளம் புதிதாக உருவாக்கி இருக்கும் புதிய மேப்பை இந்தியாவிற்கு அனுப்ப உள்ளது. இந்தியாவை சீண்டும் வகையில் நேபாளம் இந்த செயலை செய்கிறது.
Recommended Video
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மோதல் இருப்பது போலவே, இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் கடுமையான மோதல் நிலவி வருகிறது.இந்தியாவில் இருக்கும் மூன்று பகுதிகளை நேபாளம் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்தியா நேபாளம் இடையே நடக்கும் இந்த பிரச்சனைக்கு காரணம் லிபு லேக் பகுதிதான்.அங்கு இந்தியா சாலை அமைத்து கட்டுமான பணிகளை மேற்கொண்டது. ஆனால் இந்த சாலைக்கு நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

சாலை
இங்குதான் பிரச்சனை தொடங்கியது. இந்த சாலை பணிக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து எல்லையில் லிபு லேக், லம்பியாதூரா, கல்பாணி ஆகிய பகுதிகள் நேபாளுக்கு சொந்தமானது. இங்கு இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்று நேபாளம் பிரதமர் கேபி சர்மா ஒளி தெரிவித்து வருகிறார். இந்த இடங்களை நாங்கள் மீட்டு எடுப்போம் என்று நேபாளம் கூறியது.

வரைபடம் வெளியிட்டது
அதோடு இது தொடர்பாக நேபாளம் மேப் ஒன்றை வெளியிட்டது. இது தொடர்பாக அங்கு சட்ட திருத்தமும் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வரைபடம் தற்போது அந்நாட்டு ஒப்புதலை பெற்றுள்ளது. இது இந்தியாவிற்கு கோபத்தை அளித்துள்ளது. இதனால் நேபாளம் உடன் இந்தியா தற்போது உறவை முறித்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறது.

நேபாளம் எப்படி
இந்த நிலையில், தற்போது நேபாளம் தனது புதிய மேப்பை இந்தியாவிற்கு அனுப்ப உள்ளது. தனது மாற்றப்பட்ட மேப்பை இந்தியாவிற்கு நேபாளம் அனுப்ப உள்ளது. இதுதான் இனி எங்கள் மேப். நாங்கள் இதைத்தான் பயன்படுத்த போகிறோம். உங்கள் மேப்பில் தேவையான மாற்றத்தை செய்து விடுங்கள் என்று இந்தியாவிற்கு நேபாளம் கோரிக்கை வைக்க உள்ளது.

கூகுள் அனுப்பியது
அதேபோல் கூகுளுக்கும் நேபாளம் இந்த புதிய மேப்பை அனுப்ப உள்ளது. கூகுள் மேப்பில் இந்த இடங்களை நேபாளத்திற்கு கீழ் வரும் இடங்களாக குறிக்க கூகுளுக்கு நேபாளம் கோரிக்கை வைத்துள்ளது. அதேபோல் ஐநா சபைக்கும் நேபாளம் இந்த புதிய வரைபடத்தை அனுப்ப உள்ளது. இந்த புதிய வரைபடத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி, ஐநாவிற்கு நேபாளம் இதை அனுப்ப உள்ளது.

எத்தனை காப்பி
இதற்காக மொத்தம் 4000 காப்பி நேபாள வரைபடங்களை அந்த நாடு உருவாக்க உள்ளது. உலக நாடுகளுக்கு எல்லாம் அந்த நாடு இதை அனுப்ப உள்ளது. அதேபோல் தனது சொந்த நாட்டு மக்களுக்கும் இந்த வரைபடத்தை நேபாளம் அனுப்ப உள்ளது. இதற்காக 25 ஆயிரம் காப்பியை முதல் கட்டமாக நேபாளம் உருவாக்கி உள்ளது. இந்தியாவை சீண்டும் வகையில் நேபாளம் இப்படி செயல்படுகிறது.

வாய்ப்பு இல்லை
ஆனால் இதை ஐநா ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். அதாவது இந்த புதிய வரைபடத்தை ஐநா ஒப்புக்கொள்ளாது.இந்த பகுதியை பிரச்சனை நிலவும் பகுதி என்று ஐநா அறிவிக்க வாய்ப்புள்ளது. ஆனால் கண்டிப்பாக நேபாளத்தின் வரைபடத்தை ஐநா ஏற்றுக்கொள்ளாது என்று கூறுகிறார்கள்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications