குவைத் வாழ் இந்தியர்களுக்கு நல்ல செய்தி: தட்கல் முறையில் விண்ணப்பித்த அன்றே பாஸ்போர்ட்
குவைத்: குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் தட்கல் முறையில் விண்ணப்பித்த அன்றே அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் வசித்து வரும் இந்தியர்கள் தட்கல் முறையில் விண்ணப்பித்த அன்றே அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சேதம் அடைந்தாலோ, தொலைந்துவிட்டாலோ, அதன் பக்கங்கள் தீர்ந்துவிட்டாலோ, தேதி முடிந்துவிட்டாலோ தட்கல் முறையில் விண்ணப்பித்தால் உடனே பாஸ்போர்ட் கிடைக்கும்.

தட்கல் முறையில் விண்ணப்பித்து 6 முதல் 8 மணிநேரத்திற்குள் அளிக்கப்படும் பாஸ்போர்ட்டுக்கு வழக்கமான கட்டணத்துடன் சேர்த்து 46 குவைத் தினார் வசூலிக்கப்படும்.
தட்கல் முறையில் விண்ணப்பித்தால் செலுத்த வேண்டிய கட்டணம்:
சாதாரண பாஸ்போர்ட்(36 பக்கங்கள்) - குவைத் தினார் 69.50
ஜம்போ பாஸ்போர்ட் (60 பக்கங்கள்) - குவைத் தினார் 77.50
பாஸ்போர்ட் சேதம் அடைந்தாலோ, தொலைந்தாலோ - சாதாரண பாஸ்போர்ட்டுக்கு 92.50 தினார், ஜம்போ பாஸ்போர்ட்டுக்கு 100.50 தினார்.
குவைத் குடிமக்கள் அங்கு உள்ள தூதரகம் மூலம் அவசர விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்தால் அதே தேதியில் விசா வழங்கப்படும். அதற்கு கூடுதலாக 12 தினார் அளிக்க வேண்டும். தட்கல் பாஸ்போர்ட், அவசர விசா தொடர்பாக விண்ணப்பதாரர்கள் 22530600 எக்ஸ்டென்ஷன் 279 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது கன்சுலாரின் தலைமை செயலாளர் கே.கே. பஹெல் அவர்களை 97229948 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications