என்னா புத்திசாலித்தனம்... 64 பெட்ஷீட்களை கயிறாக்கி... 11வது மாடியில் இருந்து தப்பி சென்ற ‘பலே’ கைதி
நியூயார்க்: அமெரிக்காவில் சிறைச்சாலை ஒன்றில் 64 பெட்ஷீட்களை இணைத்து கயிறாக்கி, கைதி ஒருவர் 11வது மாடியில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் தடுப்பு முகாமில் கொலை வழக்கு தொடர்பாக எர்னிஸ்ட் மர்பி என்பவரை விசாரணைக்காகப் போலீசார் சிறை வைத்திருந்தனர்.
எர்னிஸ்ட் அங்குள்ள கட்டிடத்தின் 11 மாடியில் உள்ள அறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்தார்.
பெட்ஷீட் திருட்டு
இந்நிலையில், சிறையில் இருந்து தப்பிச் செல்ல திட்டமிட்ட எர்னிஸ்ட், ஒவ்வொரு அறையிலும் இருந்து பெட்ஷீட்களைத் திருடியுள்ளார். பின்னர் அவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்து கயிறாக தயாரித்துள்ளார்.
பூந்தொட்டியில் மறைத்து வைத்து
பூந்தொட்டி ஒன்றில் மறைத்து வைத்திருந்த அந்தக் கயிறைப் பயன்படுத்தி தற்போது எர்னிஸ்ட் தப்பி விட்டார்.
சினிமா பாணியில் எஸ்கேப்
சினிமா பாணியில் பெட்ஷீட்களை இணைத்து 11வது மாடியில் இருந்து கைதி தப்பிச் சென்ற சம்பவம் சிறை அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
போலீஸ் விசாரணை
இது தொடர்பாக நியூயார் நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது.
நல்ல வேளையாப் போச்சு
நல்ல வேளை இது அந்த ஊர் துணி என்பதால் பாதியிலேயே அறுந்து போகவில்லை. நம்ம ஊர் "மனோபாலா" டைப் துணியாக இருந்திருந்தால் கதை கந்தலாகியிருக்கும்!