புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிகல்லால் பூமிக்கு ஆபத்தா?: நாசா விளக்கம்
வாஷிங்டன்: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள எரிகல்லால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று நாசா அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் உள்ள கிஸ்லோவோட்ஸ்க் ஆய்வு மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் 1, 312 அடி எரிகல்லை கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி கண்டுபிடித்தனர். 2014 யுஆர்116 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த எரிகல்லால் பூமிக்கு ஆபத்து என்று ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆனால் ரஷ்யா கண்டுபிடித்துள்ள எரிகல்லால் பூமிக்கு அடுத்த 150 ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று நாசா மற்றும் அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள மைனர் பிளானட் சென்டர் ஆகியவை தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து நாசா அதிகாரிகள் கூறுகையில்,
அண்மையில் ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள எரிகல்லால் பூமிக்கு ஆபத்து என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் அந்த எரிகல்லால் பூமிக்கு ஆபத்து இல்லை. அதன் சுற்றுப்பாதை பூமிக்கு அருகில் இல்லை என்றனர்.












Click it and Unblock the Notifications