ஆமாம், கணவரை எலி மருந்து வைத்து கொன்றேன்: நைஜீரிய சிறுமி வாக்குமூலம்
கெசாவா: தனது 35 வயது கணவரை எலி பாசானம் வைத்து கொலை செய்ததை நைஜீரியாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒப்புக் கொண்டுள்ளார்.
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கானோ மாநிலத்தைச் சேர்ந்தவர் உமர் சானி(35). ரமது என்ற பெண்ணை மணந்த அவரது இரண்டாவதாக அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி வாசிலா தசுயியை திருமணம் செய்துள்ளார். கடந்த மாதம் ஏப்ரல் 5ம் தேதி இரவு உமருடன் படுக்கையை பகிர வேண்டிய முறை வாசிலாவுடையது. அன்று ரமதுவும், வாசிலாவும் சேர்ந்து சமைத்துள்ளனர்.

அதன் பிறகு சாப்பிட்ட உமர் வாயில் நுரை தள்ளி பலியானார். அவரை வாசிலா தான் விஷம் வைத்து கொலை செய்ததாக போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் உமர் வாசிலாவை திருமணம் செய்து பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. மேலும் சிறுமியை நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடாது என்றும், அவரை சிறுவர் நீதிமன்றத்தில் தான் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் கணவர் உமருக்கு உணவில் எலி பாசானம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக வாசிலா நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். அவருக்கு எழுதத் தெரியாது என்பதால் தனது வாக்குமூலத்தில் கைநாட்டு போட்டார்.
கணவருக்கு விஷம் வைத்து கொன்ற வாசிலாவுக்கு மரண தண்டனை அளிக்குமாறு மாநில வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications