இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது
திருகோணமலை: இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக ஊடுருவி மீன்பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களது மீன்பிடி படகுகள் அரசுடைமையாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசு தலையிட்ட போதும் இலங்கை கடற்படை இத்தகைய அத்துமீறல்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 9 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படை, திருகோணமலை துறைமுகத்தில் தடுத்து வைத்துள்ளது.

முன்னதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளார் சங்கங்களின் சம்மேளன தலைவர் வி.அருள்நாதன் , முல்லைத்தீவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அதில், எரிபொருட்கள் இல்லாத நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த 3 மாதங்களாக கடலுக்கு செல்லமுடியாத நிலையில் உள்ளனர். இதனால் முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இழுவைப் படகுகள் மூலம் தொடர்ச்சியாக மீன்பிடித்து வருகின்றனர். இதனால் ஈழத் தமிழ் மீனவர்களது மீன்வளம் சுரண்டப்படுகிறது. இலங்கை கடற்படையினர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில்தான் தற்போது 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தமிழகத்தின் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த மாதம் 21-ந் தேதி மீன்பிடிக்க சென்ற போது மன்னார் அருகே சட்டவிரோதமாக ஊடுருவியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 7 மீனவர்களும்தான் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications