சிரியாவில் அமெரிக்கா- ரஷ்யாவின் தாக்குதல்கள் இன்று நள்ளிரவு முதல் நிறுத்தம்- அதிபர் ஆசாத் மீது ஒபாமா
வாஷிங்டன்: பஷார் அல் ஆசாத் அதிபர் பதவியில் இருந்து விலகும் வரை சிரியாவில் அமைதி இருக்காது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் போர் நிறுத்தம் கொண்டு வருவது என்று அமெரிக்காவும், ரஷ்யாவும் முடிவு செய்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசி மூலம் பேசி முடிவு செய்தனர்.

போர் நிறுத்தம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் ஒபாமா தேசிய பாதுகாப்பு குழுவுடன் வியாழக்கிழமை சிரியா குறித்து கலந்தாலோசித்தார். சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகும் வரை போராளிகள் தங்களின் போராட்டத்தை நிறுத்த மாட்டார்கள் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்
ஆசாத் பதவி விலகினால் மட்டுமே சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களை ஒன்று சேர்க்க முடியும். சிரியாவில் எப்பொழுதும் அமைதி நிலவ வேண்டும் என்று ஆசாத் நினைத்தால் அவர் பதவி விலக வேண்டும்.
சிரியாவில் 5 ஆண்டுகளாக நடக்கும் பிரச்சனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் போர் நிறுத்தம் மூலம் இந்த பிரச்சனை தீருமா என்று பார்க்க வேண்டும். போர் நிறுத்தம் குறித்து பலரும் விமர்சிக்கலாம். ஆனால் சிரியாவில் நடக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்காவிட்டால் வரலாறு நம்மை கடுமையாக சாடும் என்றார்.
ஆசாத் பதவி விலக வேண்டும் என்று ஒபாமா ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications