ஒபாமாவுக்கு நோபல்... தப்புப் பண்ணிட்டோம் மக்களே... இப்பப் புலம்பும் நோபல் கமிட்டி செயலாளர்
ஆஸ்லோ: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்த முடிவு தவறு என்று முன்னாள் நோபல் கமிட்டி செயலாளர் கெயிர் லுன்டஸ்டாட் கூறியுள்ளார்.
ஒபாமாவுக்கு 2009ம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு எதற்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டதோ, அந்த எதிர்பார்ப்பை ஒபாமா நிறைவேற்றவில்லை. அதில் அவர் தோல்வி அடைந்து விட்டார். அனைவரையும் ஏமாற்றி விட்டார் என்றும் கெயிர் கூறியுள்ளார்.

கெயிர் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். அதில்தான் அவர் இப்படிக் கூறியுள்ளார். அவரது நூலிலிருந்து...
ஒபாமாவுக்கு இந்த நோபல் பரிசானது பலம் சேர்க்கும் என்று கருதினோம். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.
அமெரிக்காவிலேயே இந்த முடிவுக்கு கடும் விமர்சனங்கள் கிளம்பின. இந்த விருதுக்கு ஒபாமா தகுதி படைத்தவர் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த பரிசை ஒபாமாவே கூட எதிர்பார்க்கவில்லை. அவருக்கே இது ஆச்சரியம் தந்தது என்பதுதான் உண்மை.
ஒபாமாவுக்குக் கொடுக்கப்பட்ட அமைதிப் பரிசு போல வேறு எந்த பரிசும் இத்தனை கவனத்திற்குள்ளானதில்லை.
ஒபாமா ஆதரவாளர்களும் கூட இது தவறான முடிவு என்றே கருதினர். எனவே அந்த வகையில், இந்த விருதால் என்ன நடக்கும் என்று நினைத்தோமா அது நடக்கவில்லை.
முதலிஸ் விருதைப் பெறுவதற்காக ஆஸ்லோவுக்கு வரவே யோசித்தார் ஒபாமா. வெள்ளை மாளிகையிலிருந்து யாரேனும் இந்த விருதைப் புறக்கணிக்கிறார்களா என்று கூட விசாரித்தனர்.
நேரில் வந்துதான் விருதைப் பெற வேண்டும் என்பதால் வேறு வழியின்றி ஒபாமா நேரில் வந்து விருதைப் பெற்றார் என்று கூறியுள்ளார் கெயிர்.
1990ம் ஆண்டு முதல் 2015 வரை நோபல் கமிட்டி செயலாளர் பதவியில் இருந்தவர் கெயிர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications