கிம் ஜாங் உன்–னை தொட்டாலே.. இனி அணுஆயுத தாக்குதல் தான் நடத்துவோம்.. வடகொரியா முடிவின் ஷாக் பின்னணி
பியாங்யாங்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கொல்லப்பட்டாலோ அல்லது அவர் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டாலோ எதிரி நாடுகள் மீது உடனடியாக அணுஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வடகொரியா என்பது சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. இதுதவிர பிற நாடுகளுடன் நெருக்கமாக நட்பு பாராட்டுவது கிடையாது. குறிப்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் கடும் மோதல் உள்ளது. அண்டை நாடுகளாக உள்ள ஜப்பான், தென்கொரியாவுடன் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

தென்கொரியாவில் அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் வெளிநாடுகளுக்கு பயணிப்பது கிடையாது. இதனால் தன்னையும், தன் நாட்டையும் பாதுகாக்க தேவையான ஆயுதங்களை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தயாரித்து குவித்து வைத்துள்ளார். வடகொரியாவிடம் அணுஆயுதமும் உள்ளது.
வடகொரியா அணுஆயுதம் வைத்திருக்கிறது என்பதாலே அமெரிக்கா அந்த நாட்டை தேவையின்றி சீண்டுவது இல்லை. அதேவேளையில் தென்கெரியாவில் இருக்கும் அமெரிக்க படைகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனையை கிம் ஜாங் உன் நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது வடகொரியாவின் அணுஆயுத கொள்கையில் முக்கிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கிம் ஜாங் உன் உள்பட நாட்டை பாதுகாப்பதில் அணுஆயுதம் முக்கியமானதாக இருக்கும். கிம் ஜாங் உன் மீது எதிரி நாட்டு படைகள் தாக்கி அவர் உயிரிழந்தாலோ அல்லது செயல்பட முடியாத நிலைமைக்கு போனாலோ உடனடியாக அந்த நாட்டின் மீது அணுஆயுதம் கெண்டு 'அட்டாக் செய்யலாம். தானியங்கி (ஆட்டோமெட்டிக்) முறையில் தாக்குதல் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த திருத்தம் என்பது அமெரிக்கா மீதான பயத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது அமெரிக்கா சமீபகாலமாக தனது எதிரிகளை நாடு புகுந்து சிறை பிடிப்பது, கொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் நாடு புகுந்து கைது செய்தது. டொனால்ட் டிரம்ப் மற்றும் நிகோலஸ் மதுரோ இடையே தொடர்ந்து மோதல் இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது.
அதன்பிறகு ஈரான் - அமெரிக்கா இடையே நீண்டகாலமாக மோதல் இருந்தது. போர் உருவானது. மார்ச் மாதம் தொடக்கத்தில் ஈரான் அதிபர் அயதுல்ாஅலி கமேனி அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அதன்பிறகு தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கியூபாவை குறிவைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி டொனால்ட் டிரம்ப் , வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னையும் குறிவைக்கலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதனால் தான் கிம் ஜாங் உன் தனது நாட்டின் அணுஆயுத கொள்கையில் திருத்தம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications