மறுபடியும் "குழந்தை"யைக் காணோம்.. மண்டை காயும் வட கொரியர்கள்.. என்னதான் நடக்குதோ அந்த நாட்டுல!
வடகொரியா அதிபர் மறுபடியும் மாயமாகி விட்டாராம்
பியாங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மறுபடியும் திடீரென மாயமாகிவிட்டாராம்.. அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் ஒருசில அதிகாரிகள் மட்டும் மண்டையை பிய்த்து கொண்டு இருக்கிறார்கள்.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த ஏப்ரல் மாதத்தில் திடீரென காணாமல் போனார்.. அதாவது பொதுப் பார்வைக்கு தென்படாமல் மறைந்துவிட்டார்.

அப்போது அவருக்கு உடம்பு சரியில்லை என்றும், ஹார்ட் ஆபரேஷன் நடந்து வருவதாகவும் சொல்ப்பட்டது.. பிறகு திடீரென அவர் கோமாவுக்கு போய்விட்டார் என்று செய்திகள் வெளிவந்தன.. அதற்கு பிறகு கிம் ஜோங் உன் நன்றாகவே இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டன.
அதற்கேற்றபடி, ஒருநாள் திடீரென மீடியாவில் காட்சியளித்தார்.. அதனால் அவர் நலமுடன்தான் இருக்கிறார் என்பது உறுதியானது.. இதனிடையே, தொற்று காலத்தில் தனது மக்களுக்கு ஆதரவாக நிற்க தவறியதற்கு மன்னிப்பு கேட்டார் கிம்.. அதுமட்டுமல்ல, என் நாட்டு மக்களுக்கு என்னால் உதவி செய்ய முடியவில்லையே என்று தேம்பி தேம்பி அழுதார்.. இந்த காட்சியை எல்லாம் உலக நாடுகள் மிரண்டுபோய் பார்த்து கொண்டிருந்தன.
இந்நிலையில், இப்போது மறுபடியும் மாயமாகி விட்டாராம்.. அவர் பொது பார்வைக்கு ரொம்ப நாட்களாகவே தென்படாமல் மறைந்துவிட்டார்.. கடைசியாக அக்டோபர் 21ம் தேதிதான் கிம் ஜாங் உன்னை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
1950-53-ம் ஆண்டில் நடைபெற்ற கொரிய போரில், சீன ராணுவ வீரர்களை எதிர்த்து சண்டையிட்டு உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக, தெற்கு பியோங்யாங் மாகாணத்தில் உள்ள கல்லறை தோட்டத்துக்கு அன்றைய தினம் வந்திருக்கிறார்.. அதோடு சரி.. ஆளை காணோமாம்!
ஆனால், இந்த முறை அதிபரை காணோம் என்றதுமே யாரும் கண்டுகொள்ளவே இல்லை.. "இவருக்கு இதே வேலையாக போய்விட்டது.. திடீரென காணாமல் போய்விடுவார்... பிறகு திடீரென காட்சி தருவார்" என்பதால், இந்த முறையும் அவர் எப்படியும் வந்து எண்ட்ரி ஆவார் என்று நினைத்து அசால்ட்டாக இருக்கிறார்கள் அந்த நாட்டினர்!
20 நாட்களாக ஒரு அதிபர் காணாமல் போய்விட்டாலும், இதனை அந்நாட்டு மக்கள் சீரியஸாக எடுத்து கொள்ளாமல் நகர்ந்து வருவது ஆச்சரியமாக உள்ளது!
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications