டெல்லியை 5 நிமிடத்தில் தாக்க முடியுமாம்... மிரட்டுகிறார் பாக். அணு விஞ்ஞானி
இஸ்லாமாபாத்: டெல்லியை 5 நிமிடங்களில் தாக்கும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது என்று அந்த நாட்டு அணு விஞ்ஞானி அப்துல் காதர் கான் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் அணுசக்தி துறை தந்தையான ஏ.கியூ.கான் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:
1998-ல் முதல் அணு குண்டு சோதனையை பாகிஸ்தான் நடத்தியது. அதற்கு முன்பு 1984-ம் ஆண்டிலேயே அணுகுண்டு சோதனை நடத்த திட்டமிட்டோம். ஆனால் சர்வதேச பொருளாதார தடை அச்சத்தால் அன்றைய ராணுவ தளபதி ஜியா உல் ஹக் திட்டத்தை தடுத்துவிட்டார்.
ராவல் பிண்டி அருகேயுள்ள கதுவா தளத்தில் இருந்து 5 நிமிடங்களில் ஏவுகணை மூலம் டெல்லியை தாக்கும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது.
இவ்வாறு கான் பேசினார்.
இவர் குறிப்பிடும் கதுவா நகரில் யுரேனியத்தை செறிவூட்டும் ஆராய்ச்சி மையம் உள்ளது. அங்குதான் அணுகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.