9/11 நினைவு தினம்: மனைவி மிஷலுடன் ஒபாமா அஞ்சலி
வாஷிங்டன்: 9/11 தாக்குதல்களின் 12வது ஆண்டு நினைவு தினமான நேற்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி மிஷலுடன் மௌன அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மற்றும் வாஷிங்டனில் உள்ள பென்டகன் அலுவலகத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்கினர். இந்த தாக்குதலின் 12வது ஆண்டு நினைவு தினம் நேற்று அணுசரிக்கப்பட்டது.
9/11 நினைவிடத்தில் மக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். பென்டகனில் நடந்த நினைவு தின நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது மனைவி மிஷலுடன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

வெள்ளை மாளிகையில்
பென்டகனுக்கு செல்லும் முன்பு வெள்ளை மாளிகையில் உள்ள புல்வெளியில் ஒபாமா, மிஷல், துணை அதிபர் ஜோ பிடென், அவரது மனைவி ஜில் பிடென் ஆகியோர் உலக வர்த்தக மையத்தின் முதல் கோபுரத்தை விமானம் தாக்கிய நேரமான காலை 8.46 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

பென்டகனில்
வெள்ளை மாளிகையைத் தொடர்ந்து 9/11 தாக்குதல்களில் பலியானவர்களுக்கு ஒபாமா பென்டகனில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

மலர் வளையம்
பென்டகன் தாக்குதலில் பலியானவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்த ஒபாமா.

லிபியா
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த தாக்குதலில் பலியான அமெரிக்க தூதர் உள்ளிட்ட 4 பேருக்கும் ஒபாமா அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications