போர் விமானங்கள் மீது தாக்குதல்: தெற்கு சூடானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஜூபா: தெற்கு சூடானில் அமெரிக்க போர் விமானங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீரினுக்கு எதிராக நடக்கும் உள்நாட்டுப் போர் மிக தீவிரமடைந்துள்ளது. ராணுவத்துக்கும் புரட்சி படைக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது.
தெற்கு சூடானில் உள்ள ஜொங்கோலி மாநிலத்தின் அபோக்கோ நகரில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தின் மீது சுமார் 2 ஆயிரம் நுவர் இன தீவிரவாதிகள் கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தினர். நுகர் இன தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவை சேர்ந்த 2 அமைதிப்படையினர் உட்பட மொத்தம் 22 பேர் இந்த தாக்குதலில் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
போர் உச்சத்தை எட்டியுள்ளதால், தெற்கு சூடானில் வாழும் அமெரிக்கர்களை திரும்ப அழைத்து வரருவதற்காக அமெரிக்கா 45 ராணுவ வீரர்களுடன் 3 போர் விமானங்களை அனுப்பியது.
புரட்சிப் படையினரின் பிடியில் உள்ள போர் நகரத்தில் அமெரிக்க விமானங்கள் தரையிறங்க முயன்ற போது, புரட்சிப் படையினர் ஆவேச தாக்குதல் நடத்தினர். இதில் 4 அமெரிக்க வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'ஆயுத பலத்தை பயன்படுத்தி தெற்கு சூடானின் ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்களின் இத்தகைய செயல்பாடுகள் அமெரிக்காவும், சர்வதேச சமுதாயமும் அளித்து வரும் நீண்டகால ஆதரவை இழக்கும் நிலைக்கு தெற்கு சூடானை தள்ளிவிடும்' என அவர் எச்சரித்துள்ளார்.
'ஜுபா மற்றும் போர் பகுதிகளில் வசிக்கும் எங்கள் நாட்டினரை திரும்ப அழைத்துக் கொள்ளும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு தெற்கு சூடான் தலைவர்களுக்கு உண்டு 'என்றும் ஒபாமா கூறியுள்ளார்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications