விஷ ஊசிக்கு தப்பித்த கைதி நெஞ்சு வலியில் சாவு
வாஷிங்டன்: அமெரிக்காவில் பல மாகாணங்களில் கடும் குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இதுபோல லெய்டன் லாக்கெட் என்பவர் செய்த குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அவருக்கு விஷ ஊசி போட்டு கொல்வதற்கு ஏற்பாடுகள் நடந்தன.
வேலை செய்யாத விஷ ஊசி:
விஷ ஊசி போடும் ஊழியர் அவருக்கு விஷ ஊசி போட்டார். ஆனால் விஷ ஊசி வேலை செய்யவில்லை. அந்த மருந்தால் அவரது உடலில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனாலும் அவர் உயிரிழக்கவில்லை.
மருந்துகள் இறக்குமதி:
ஆனால் வலி காரணமாக 40 நிமிடத்திற்கு பிறகு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் உயிரிழந்தார். அமெரிக்கா விஷ ஊசி மருந்துகளை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இதுவரை இறக்குமதி செய்து வந்தது.
வீரியம் இல்லா மருந்துகள்:
மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடுகள் தற்போது விஷ ஊசி மருந்துகளை வழங்குவதை நிறுத்திவிட்டன. இதனால் வேறு வகையில் அமெரிக்க மகாணங்கள் விஷ ஊசி மருந்துகளை வரவழைக்கின்றன. அந்த மருந்து சரியான வீரியம் இல்லாமல் இருந்ததால் கைதி இறக்கவில்லை என்று தெரிகிறது.
நிறுத்தப்பட்ட தண்டனை:
லெய்டன்லாக்கெட்டுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதற்கு பிறகு இன்னொருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதாக இருந்தது. ஆனால் மருந்து வேலை செய்யாததால் அவரது மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications