ஏன் ஆத்தா பல்லு அப்படி இருக்கு... மனைவியின் ‘பல்லை’ப் பார்த்து உளவு கேமரா என பயந்த பின்லேடன்!
வாஷிங்டன்: தனது மனைவியின் மாற்றுப் பல்லை அமெரிக்காவின் உளவு கேமராவாக நினைத்து, அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான பின்லேடன் பயந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவராக பதவி வகித்து, பல்வேறு தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வந்த ஒசாமா பின்லேடன், கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அவரது சடலத்தை கடலில் அடக்கம் செய்து விட்டதாக அமெரிக்கா கூறிவருகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, ஒசாமாவின் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் டிஸ்க்குகள் மற்றும் சில முக்கிய கோப்புகளை அமெரிக்க ராணுவத்தினர் அப்போது கைப்பற்றினர். அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா வெளியிட்டு வருகிறது.

சந்தேகம்...
அதன்படி, சமீபத்தில் வெளியான தகவலில், தன்னைச் சுற்றியுள்ள பொருட்களில் அமெரிக்காவின் உளவு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஒசாமாவிற்கு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் எப்போதும் அனைத்தையும் சந்தேகக் கண் கொண்டே கண்காணித்து வந்துள்ளார் ஒசாமா.

ரகசிய கண்காணிப்பு கேமரா...
கடத்தப்பட்ட பிணையக்கைதிகளை விடுவிக்க பணம் கொண்டுவரும் சூட்கேஸ்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் என ஒசாமா சந்தேகித்துள்ளார். அப்படி, கத்தார் நாட்டைச் சேர்ந்த ஒரு அதிகாரி விட்டுச் சென்ற ஒரு பணப்பெட்டியை அவனது பாதுகாவலர்கள் சம்மட்டியால் அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது.

மாற்றுப்பல்...
இதேபோல், தனது மூன்று மனைவிகளில் ஒருவரின் வாயில் இருந்த மாற்றுப்பல்லையும் அவர் சந்தேகித்துள்ளார். பல் பிரச்சினை காரணமாக ஈரானில் உள்ள பிரபல பல் மருத்துவரிடம் மாற்றுப்பல் பொருத்தியுள்ளார் ஒசாமாவின் மனைவி.

ரகசிய கேமரா...
அதன் தொடர்ச்சியாக ஒரு கோதுமைமணி அளவு நீளத்திலும், ஒரு சேமியா அளவு அகலத்திலும் இருந்த அந்த பொய்ப்பல்லுக்குள் அமெரிக்க உளவுத்துறையினர் ரகசிய கண்காணிப்பு கேமராவை பொருத்தியிருப்பார்களோ என்ற சந்தேகம் ஒசாமாவிற்கு ஏற்பட்டுள்ளது.

மனைவிகளுக்குள் சண்டை....
முன்னதாக ஒசாமாவின் இருப்பிடம் அவரது மூத்த மனைவி மூலமாகத் தான் தெரியவந்திருக்க வேண்டும் என 2012ம் ஆண்டு பரபரப்புத் தகவல் வெளியானது. இது தொடர்பாக பாகிஸ்தான் சிறைக்குள் ஒசாமாவின் மனைவிகள் இருவருக்கும் இடையே சண்டை கூட ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications