பின்லேடன் உடல் மிதக்காமல் இருக்க 300 பவுண்ட் சங்கிலியை வைத்து கடலில் வீசிய அமெரிக்கா
வாஷிங்டன்: அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனின் உடலை ஒரு பையில் போட்டு அதில் 300 பவுண்ட் எடை உள்ள சங்கிலிகளை வைத்து கடலில் வீசியதாக முன்னாள் சிஐஏ தலைவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அமெரிக்காவில் இருந்த இரட்டை கோபுரங்களை விமானங்கள் மூலம் தாக்கி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது அல் கொய்தா தீவிரவாத அமைப்பு. இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கா வலை வீசித் தேடியது.
ஆப்கானிஸ்தானின் அப்போத்தாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்க படையினர் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி சுட்டுக் கொன்றனர்.

உடல்
ஒசாமாவின் உடலை கடலில் அடக்கம் செய்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

லியோன் பனேட்டா
முன்னாள் சிஐஏ தலைவரும், பாதுகாப்பு துறை செயலாளருமான லியோன் பனேட்டா தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.
வொர்தி பைட்ஸ்: எ மெமோய்ர் ஆப் லீடர்ஷிப் இன் வார் அன்ட் பீஸ் என்று தலைப்பிடப்பட்ட அந்த புத்தகத்தில் ஒசாமா பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒசாமா
ஒசாமாவின் உடலை முஸ்லிம் முறைப்படி அடக்கம் செய்ய அதை வெள்ளை துணியில் சுற்றி, அரபியில் பிரார்த்தனை செய்யப்பட்டது என்று பனேட்டா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

சங்கிலி
ஒசாமாவின் உடலை கருப்பு நிற பையில் வைத்து அதில் 300 பவுண்ட் எடையுள்ள இரும்பு சங்கிலிகள் வைக்கப்பட்டது. உடல் மிதக்காமல் இருக்கவே சங்கிலிகள் வைக்கப்பட்டன.

கடல்
உடலை ஒரு வெள்ளை நிற மேஜையில் வைத்து அதை கப்பலின் ஓரத்தில் வைத்துள்ளனர். உடல் வைக்கப்பட்ட பை கணமாக இருந்ததால் அதோடு சேர்ந்து மேஜையும் கடலில் விழுந்தது. உடல் மூழ்கிவிட்டது ஆனால் மேஜை மிதந்தது என பனேட்டா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications