மனைவி, குழந்தைகளுடன் வசிக்கும் இந்தியரை நாடு கடத்த தடை: பாக். ஹைகோர்ட் உத்தரவு
லாகூர்: மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாகிஸ்தானில் வசித்து வரும் இந்தியரை நாடு கடத்தும் உத்தரவுக்கு லாகூர் ஹைகோர்ட் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள லாகூர் ஹைகோர்ட்டில் ராபியா ஜஹாங்கீர் என்ற பெண் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அவர் தெரிவித்திருப்பதாவது :-
‘நான் இந்தியாவை சேர்ந்த ஜபார் ரியாஸ் என்பவரை 2005-ம் ஆண்டில் திருமணம் செய்து எனக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர் இந்தியாவில் நடத்திய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அங்கு அவருக்கு நிதி உதவி அளிக்க யாரும் இல்லை. இதனால் அவர் என்னுடன் பாகிஸ்தானில் தங்கியிருக்கிறார்.
டிசம்பர் 14-ந்தேதிக்குள் அவர் நாட்டைவிட்டு வெளியேற அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே என் குழந்தைகளுக்கும், எனது திருமண வாழ்க்கையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே கணவருக்கு நிரந்தர குடியுரிமை விசா வழங்க வேண்டும்' என இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
ராபியாவின் மனுவை விசாரணைக்கு ஏற்ற, லாகூர் ஹைகோர்ட்டு நீதிபதி இஜாசூல் அசான் வழக்கை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், விசாரணை முடியும் வரையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரை பாகிஸ்தானை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் ஈடுபட கூடாது என்றும் அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications