பாகிஸ்தானின் மிகப் பெரிய சதி அம்பலம்.. இந்தியா மீது பழி போட திட்டம்? இதை பார்த்தால் புரியும்
லாகூர்: பொதுவாக இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உருவானால் முதலில் ஒரு அரசு செய்ய வேண்டியது தங்களது வான் வழியை மூடுவது தான். எந்த இடத்தில் போர் ஆபத்து இருக்கிறதோ, அந்த இடத்தில் விமானங்கள் செல்ல அனுமதி அளிக்கக் கூடாது.
இதற்கு காரணம் ஏதேனும் வான்வழி தாக்குதலில் விமானங்கள் சிக்கி விடக்கூடாது என்பதுதான். இந்த சூழலில் பாகிஸ்தான் தொடர்ந்து ட்ரோன்கள் மூலம் இந்தியாவில் எல்லையோர மாநிலங்களில் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனை அடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையோரத்தில் இருக்கும் மாநிலங்களில் 32 விமான நிலையங்களை மூடி இருக்கிறது. மேலும் பாகிஸ்தான் எல்லையோர பகுதிக்கு எந்த ஒரு விமானங்களும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய எல்லையோர பகுதிகளில் பயணிகள் விமானத்தை இயக்கி வருகிறது.
இது தொடர்பாக இந்தியா ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் குற்றச்சாட்டியது. அதில் பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக இந்தியா கூறியிருந்தது. இந்த நிலையில் இன்று இரவு மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், விமான போக்குவரத்தை கண்காணிக்கும் செயலியில் பாகிஸ்தானின் இந்த சதித்திட்டம் அம்பலமாக இருக்கிறது.
இதில் இந்தியா பகுதிகளில் எந்த ஒரு விமானமும் செல்லவில்லை. ஆனால் பாகிஸ்தானில் மட்டும் பல விமானங்கள் இந்திய எல்லையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்தியா ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தாமல் அமைதி காத்து வருகிறது. இந்த நிலையில் தான் பாகிஸ்தானே தங்களது விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டு அதை இந்தியா மீது பழி போட்டுவிட தான் இவ்வாறு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் தான் போர் நடக்கும் பகுதியில் பயணிகள் விமானங்களை பாகிஸ்தான் வேண்டுமென்றே அனுமதி அளிக்கிறது என்று கூறப்படுகிறது. தாங்களே சுட்டு வீழ்த்தி விட்டு இந்தியா தான் செய்தது என்று கூறி உலக நாடுகளுக்கு மத்தியில் விக்டீம் கார்டை பயன்படுத்த பாகிஸ்தான் முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.போரில் பின்னடைவை சந்திக்கும் பாகிஸ்தான் ராணுவம், இப்படி உள்ளடி வேலை செய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் உலக நாடுகள் உடனடியாக பாகிஸ்தானை பயணிகள் விமானத்தை எல்லையோர பகுதிகளில் செல்ல தடை விதிக்க வற்புறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications