பாகிஸ்தானின் மிகப் பெரிய சதி அம்பலம்.. இந்தியா மீது பழி போட திட்டம்? இதை பார்த்தால் புரியும்
லாகூர்: பொதுவாக இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உருவானால் முதலில் ஒரு அரசு செய்ய வேண்டியது தங்களது வான் வழியை மூடுவது தான். எந்த இடத்தில் போர் ஆபத்து இருக்கிறதோ, அந்த இடத்தில் விமானங்கள் செல்ல அனுமதி அளிக்கக் கூடாது.
இதற்கு காரணம் ஏதேனும் வான்வழி தாக்குதலில் விமானங்கள் சிக்கி விடக்கூடாது என்பதுதான். இந்த சூழலில் பாகிஸ்தான் தொடர்ந்து ட்ரோன்கள் மூலம் இந்தியாவில் எல்லையோர மாநிலங்களில் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனை அடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையோரத்தில் இருக்கும் மாநிலங்களில் 32 விமான நிலையங்களை மூடி இருக்கிறது. மேலும் பாகிஸ்தான் எல்லையோர பகுதிக்கு எந்த ஒரு விமானங்களும் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய எல்லையோர பகுதிகளில் பயணிகள் விமானத்தை இயக்கி வருகிறது.
இது தொடர்பாக இந்தியா ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் குற்றச்சாட்டியது. அதில் பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக இந்தியா கூறியிருந்தது. இந்த நிலையில் இன்று இரவு மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், விமான போக்குவரத்தை கண்காணிக்கும் செயலியில் பாகிஸ்தானின் இந்த சதித்திட்டம் அம்பலமாக இருக்கிறது.
இதில் இந்தியா பகுதிகளில் எந்த ஒரு விமானமும் செல்லவில்லை. ஆனால் பாகிஸ்தானில் மட்டும் பல விமானங்கள் இந்திய எல்லையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்தியா ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தாமல் அமைதி காத்து வருகிறது. இந்த நிலையில் தான் பாகிஸ்தானே தங்களது விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டு அதை இந்தியா மீது பழி போட்டுவிட தான் இவ்வாறு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் தான் போர் நடக்கும் பகுதியில் பயணிகள் விமானங்களை பாகிஸ்தான் வேண்டுமென்றே அனுமதி அளிக்கிறது என்று கூறப்படுகிறது. தாங்களே சுட்டு வீழ்த்தி விட்டு இந்தியா தான் செய்தது என்று கூறி உலக நாடுகளுக்கு மத்தியில் விக்டீம் கார்டை பயன்படுத்த பாகிஸ்தான் முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.போரில் பின்னடைவை சந்திக்கும் பாகிஸ்தான் ராணுவம், இப்படி உள்ளடி வேலை செய்ய வாய்ப்பு உள்ளது என்பதால் உலக நாடுகள் உடனடியாக பாகிஸ்தானை பயணிகள் விமானத்தை எல்லையோர பகுதிகளில் செல்ல தடை விதிக்க வற்புறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications