இந்திய ராணுவ வீரரை சிறைப்பிடித்த பாகிஸ்தான்! எல்லை தாண்டியதாக கூறி கைது செய்தது! மீட்பு பணி தீவிரம்
இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பாகிஸ்தானியர்களிடம் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் பிடிபட்டுள்ள இந்திய வீரர் கொல்கத்தாவை சேர்ந்த பிகே சிங் என்பதும், 17 ஆண்டுகளாக அவர் ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய வீரரிடம் இருந்து
துப்பாக்கி, வாக்கி டாக்கி உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் சர்வதேச எல்லையை தாண்டியதாக கூறி இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்டனர். மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பைசன் பள்ளத்தாக்கு பகுதியில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு இருந்த சுற்றுலாப்பயணிகள் மீது, ஈவு இரக்கமின்றி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். குறிப்பாக அங்கு இருந்த ஆண் சுற்றுலாப்பயணிகளிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை சும்மா விட மாட்டோம் என்று இந்தியா எச்சரித்து உள்ளது.
இதற்கிடையே, எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் நேற்று (ஏப்ரல் 23)பிடிபட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் உள்ள பிரோஸ்புர் பகுதியில் சர்வதேச எல்லைப்பகுதியை தவறுதலாக இந்திய வீரர் பணியில் இருந்த தாண்டியுள்ளார்.
பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டுள்ள ராணுவ வீரரை பத்திரமாக மீட்க கொடி ஆலோசனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த சீனியர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளர். இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பாகிஸ்தானியர்களிடம் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் சர்வதேச எல்லையை தாண்டியதாக கூறி இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications